ஜேர்மன் நகரமொன்றில் இடிந்து விழுந்த பால்கனி: இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் நிலை என்ன?
ஜேர்மன் நகரமொன்றில் வீட்டின் பால்கனி ஒன்று இடிந்து விழுந்ததில் 9 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார்கள். ஜேர்மன் நகரமான Horn Bad Meinbergஇல், மரத்தாலான பால்கனியில் இளைஞர்கள் சிலர் நின்றுகொண்டிருந்தபோது, திடீரென அது இடிந்து விழுந்துள்ளது.
அப்போது, அதில் நின்றுகொண்டிருந்தவர்கள் பால்கனியிலிருந்து விழுந்ததுடன், அடுத்த மாடியில் இருந்த பால்கனியில் மோதி, அதுவும் இடிந்து, தரையில் சென்று மோதி விழுந்திருக்கிறார்கள்.
மீட்புக் குழுவினர் வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டிருக்கிறார்கள். சுமார் 70 தீயணைப்பு வீரர்கள் இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 21 முதல் 24 வயதுடைய நான்கு பேர் படுகாயமடைந்துள்ளார்கள், ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பொலிசார் இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.