கல்லூரி படிப்பு இடைநிறுத்தம் - பில்லியனர் பட்டியலில் இணைந்த 34 வயது இந்தியர்
2026 ஆம் ஆண்டுக்கான பில்லியனர்கள் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த 34 வயதான அலக் பாண்டே(Alakh Pandey), இந்த பில்லியனர் பட்டியலில் இணைந்துள்ளார்.
பில்லியனர் பட்டியலில் இணைந்த அலக் பாண்டே
கான்பூரில் உள்ள ஹர்கோர்ட் பட்லர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியலில் பி.டெக் பயின்ற அலக் பாண்டே, மூன்றாம் ஆண்டிலேயே கல்லூரியை விட்டு வெளியேறினார்.

கல்லூரியில் படிக்கும் போதே ஒரு வகுப்பிற்கு ரூ.125 ஊதியத்தில் அவர் பயிற்சி மையங்களில் ஆசிரியராக பணியாற்றியதாக கூறப்படுகிறது.
2014 ஆம் ஆண்டில், அவர் "Physics Wallah - Alakh Pandey" என்ற யூடியூப் சேனலைத் தொடங்கி, அதன் மூலம் இலவசமாக எளிமையாக புரியும் வகையில் இயற்பியல் படங்களை பயிற்று வித்தார்.

இந்த சேனலுக்கு கிடைத்த வரவேற்பையடுத்து, 2020 ஆம் ஆண்டில் பிரதீக் என்பவருடன் இணைந்து பிசிக்ஸ் வாலா என்ற கல்வித் தொழில்நுட்ப நிறுவனத்தை தொடங்கினர். இந்த நிறுவனம் மாணவர்கள் போட்டி தேர்வில் தேர்ச்சி பெற பயிற்சி வழங்குகிறது.
அதன் பின்னர் பல்வேறு போட்டி தேர்வு பயிற்சி மையங்களை கையகப்படுத்தி நிறுவனத்தை விரிவுபடுத்தியது.
2022 ஆம் ஆண்டில், 100 மில்லியன் டொலர் நிதி திரட்டி ஒரு பில்லியன் சந்தை மதிப்பை பெற்று யுனிகார்ன் நிறுவனமாக உருவெடுத்தது.

2023 ஆம் ஆண்டில் 34க்கும் மேற்பட்ட நகரங்களில் பயிற்சி மையங்களை தொடங்கியது. செப்டம்பர் 2024 இல், நிறுவனம் 2.8 பில்லியன்டொலர் மதிப்பீட்டில் 210 மில்லியன் டொலர் நிதியைத் திரட்டியது.
தற்போது அலக் பாண்டேவின் சொத்து மதிப்பு 1 பில்லியன் டொலராக(இந்திய மதிப்பில் ரூ.14,510 கோடி) உயர்ந்துள்ளது.
பில்லியனர் பட்டியலில் அவர் இணைந்த பின்னர், Physics Wallah நிறுவனத்திற்கு வருமான வரித்துறை ரூ.230 கோடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |