பெண்ணுக்கு குளிர்பானத்தில் போதை மருந்தை கலந்து தந்து சீரழித்த கல்லூரி பேராசிரியர்! ஆன்லைன் நட்பை நம்பியதால் நடந்த விபரீதம்
இந்தியாவில் பொறியியல் தேர்வு பயிற்சி நிலையம் நடத்தி வந்த பெண்ணுக்கு குளர்பானத்தில் போதை மருந்தை கலந்து கொடுத்து சீரழித்த கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூரை சேர்ந்தவர் நீரஜ். இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
நீரஜுக்கு ஓன்லைன் மூலம் மும்பையில் பொறியியல் தேர்வு பயிற்சி நிலையம் நடத்தி வந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அப்பெண்ணை உதய்பூருக்கு வருமாறு நீரஜ் அழைப்பு விடுத்தார்.
அதை நம்பி அவரும் சென்ற நிலையில் நீரஜ் கொடுத்த குளிர்பானத்தை கொடுத்தார். அதை குடித்த பின்னர் அப்பெண்ணுக்கு போதை ஏறியது, அதை பயன்படுத்தி நீரஜ் அவரை பலாத்காரம் செய்தார்.
இது தொடர்பாக அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் பொலிசார் நீரஜை கைது செய்துள்ளனர்.
விசாரணையில் நீரஜ் கொடுத்த பானத்தில் போதை மருந்து கலந்திருந்தது தெரியவந்துள்ளது.