மணிப்பூரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கர்னல், அவரது மனைவி, மகன் உட்பட 7 பேர் பலி!
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நடத்தியதில் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவின் கர்னல், அவரது மனைவி, மகன் உட்பட 7 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மர் எல்லைப் பகுதி அருகே உள்ள சூரசந்த்பூர் மாவட்டத்தில் இன்று காலை நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
காலை 10 மணியளவில் கர்னல் விப்லவ் திரிபாதி, மாவட்டத்தில் ஒரு குடிமை நடவடிக்கை திட்டத்தை மேற்பார்வையிடச் சென்றபோது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
தாக்குதலுக்கு உள்ளான வாகனத்தில் கர்னல் விப்லவ் திரிபாதியின் மனைவியும் மகனும் இருந்துள்ளனர்.
பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் முதலில் விப்லவ் திரிபாதியின் கான்வாய் மீது ஐஇடி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர், பின்னர் வாகனங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் கார் ஓட்டுநர் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது, இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், மணிப்பூரை தளமாகக் கொண்ட மக்கள் விடுதலை ராணுவம் இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
மணிப்பூரில் அசாம் ரைபிள்ஸ் படைப்பரிவினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டன் தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தாக்குதல் நடத்தியவர்கள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என உறுதியளித்துள்ளார்.