சொந்த பிள்ளைகளை கொலை செய்து தப்பிய தாயார்: திருட்டு சம்பவம் விசாரிக்க சென்ற பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் சொந்த பிள்ளைகள் இருவரை கொலை செய்து விட்டு தப்பியதாக நம்பப்படும் பெண் ஒருவரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இரண்டு இளம் சிறார்களை சடலமாக
திருட்டு சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்த நிலையில், விசாரிக்க சென்ற பொலிசார் இரண்டு இளம் சிறார்களை சடலமாக மீட்டுள்ளதுடன் ஒருவரை காயங்களுடனும் மீட்டுள்ளனர்.
Credit: Colorado Springs Police Department
இந்த நிலையில் 35 வயதான Kimberlee Singler என்பவர் பொலிசாரின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும், டிசம்பர் 19ம் திகதி நடந்த சிறார்கள் இறப்பு தொடர்பிலும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பும் அளித்துள்ளார்.
ஆனால் அவர் திடீரென்று மாயமானதாக கூறப்படுகிறது. தொடர்புடைய பெண்மணியை கொலை வழக்கில் கைது செய்யும் பொருட்டு தரவுகளை திரட்டியுள்ள பொலிசார், நடவடிக்கை எடுக்கவிருந்த நிலையில் அவர் மாயமானதாக கூறப்படுகிறது.
பொலிஸ் கண்காணிப்பில் அவர் இருக்கவில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத் தரவுகளின்படி, பெற்றோருக்குரிய நேரம் மற்றும் பிற பிரச்சினைகள் தொடர்பாக சிங்கிளருக்கும் அவரது முன்னாள் கணவருக்கும் இடையே நடந்து வரும் சட்டப் போராட்டத்தின் மத்தியில் குழந்தைகளின் மரணம் நிகழ்ந்துள்ளது என்றே தெரியவந்துள்ளது.
911 இலக்கத்திற்கு அழைப்பு
இந்த விவகாரம் தொடர்பிலான நீதிமன்ற விசாரணையானது ஜனவரி மாதம் முன்னெடுக்கப்பட இருக்கிறது. டிசம்பர் 19ம் திகதி உள்ளூர் நேரப்படி இரவு 12.30 மணியளவில் திருட்டு சம்பவம் தொடர்பில் 911 இலக்கத்திற்கு அழைக்கப்பட்டுள்ளது.
@ap
இதனையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் சிங்கிளரின் குடியிருப்பில் அவரது 9 வயது மகள் மற்றும் 7 வயது மகன் ஆகியோரை சடலமாக மீட்டுள்ளனர். மட்டுமின்றி, சிங்கிளரும் அவரது 11 வயது மகளும் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அந்த 11 வயது சிறுமி சில நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார். தற்போது மாயமான சிங்கிளரை கொலராடோ மாகாண பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |