சொந்த பிள்ளைகளை கட்டியணைத்தபடி... தீக்குளித்த தாயார்: நடுங்கவைக்கும் சம்பவம்
இந்திய மாநிலம் கேரளாவில் இரண்டு பிள்ளைகளுடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்று சிகிச்சையில் இருந்த தாயார் மரணமடைந்துள்ளார்.
கேரள மாநிலம் அங்கமாலி பகுதியில் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்த அஞ்சு என்பவரே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டவர். சம்பவத்தின் போது பிள்ளைகளான ஆதிரா(7), அனூஷ்(3) ஆகிய இருவரையும் கட்டியணைத்தபடி அஞ்சு தீக்குளித்ததாக கூறப்படுகிறது.
மதியத்திற்கு பிறகு சுமார் 3 மணியளவில் நடந்த இச்சம்பவத்தை அடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அஞ்சு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
முன்னதாக, தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட ஆதிரா மற்றும் அனூஷ் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சேர்ப்பித்த நிலையில் மரணமடைந்ததாக மருத்துவர்கள் தரப்பு தெரிவித்திருந்தது.
அஞ்சுவின் கணவர் அனூப் கடந்த மாதம் 2ம் திகதி மாரடைப்பால் மரணமடைந்தார். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த அஞ்சு இன்று பிள்ளைகள் இருவருடன் தற்கொலை செய்து கொண்டதாக கருதப்படுகிறது