தூங்கவிடாமல் செய்த சேவல் மீது புகார் அளித்த பக்கத்துவீட்டுக்காரர்.., அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை
பக்கத்துவீட்டுக்காரர் ஒருவர் தூங்கவிடாமல் செய்த சேவல் மீது புகார் அளித்த வினோத சம்பவம் நடைபெற்றுள்ளது.
சேவல் மீது புகார்
இந்திய மாநிலமான கேரளா, பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பல்லிகல் கிராமத்தில் உள்ளவர் ராதாகிருஷ்ண குருப். இந்த முதியவருக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே சேவலால் தகராறு வந்துள்ளது.
அதாவது, பக்கத்து வீட்டுக்காரர் அனில் குமாரின் சேவல் அதிகாலை 3 மணிக்கே கூவ தொடங்கியதால் ராதாகிருஷ்ண குருப் நீண்ட காலமாகவே இரவில் தூக்கம் இல்லாமல் இருந்து வந்துள்ளார்.
இதனால் சரியான தூக்கம் இல்லாமல் ராதாகிருஷ்ணின் உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து, பக்கத்துவீட்டுக்காரரின் சேவலால் தனக்கு தூக்கம் கெடுவதாக அடூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் (RDO) ராதாகிருஷ்ண குருப் புகார் அளித்தார்.
இந்த புகாரை எடுத்துக்கொண்ட அதிகாரிகள் விசாரித்த போது, வீட்டின் மேல் தளத்தில் சேவல் வைக்கப்பட்டிருந்ததால் அது கூவும் சத்தம் அதிகமாகக் கேட்டுள்ளது என்பதை தெரிந்து கொண்டனர்.
பின்னர், அனில்குமாரிடம் கோழி கொட்டகையை மேல்தளத்தில் இருந்து அகற்றி வீட்டின் தெற்குப் பக்கத்திற்கு மாற்றுமாறு அதிகாரிகள் கூறினர். இதற்காக, அதிகாரிகள் அவருக்கு 14 நாட்கள் கெடு விதித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |