பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் தாய் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிப்பு
உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களில் ஒருவராக உன்னாவ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாரை அறிவித்துள்ளார் பிரியங்கா காந்தி.
உத்தரபிரதேசத்தின் உன்னாவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், 2017ம் ஆண்டு பாஜகவை சேர்ந்த குல்தீப் சிங் செங்கார் தன்னை வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர், சிறையில் மர்மமான முறையில் அப்பெண் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்திலும் குல்தீப் சிங் செங்காருக்கு தொடர்பு உள்ளதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து 2019ம் ஆண்டு நடந்த கார் விபத்தில், குறித்த பெண்ணின் 2 உறவினர்கள் உயிரிழந்தனர், வழக்கறிஞருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்திலும் குல்தீப் சிங் செங்காருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது, இதுதொடர்பான வழக்கு விசாரணையில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில், பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
இந்நிலையில் நடைபெறவுள்ள உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகிறார் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார்.
இதுகுறித்து பிரியங்கா காந்தி கூறுகையில்,
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் 40 விழுக்காடு பெண்கள், 40 விழுக்காடு இளைஞர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏவால் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணின் தாயார் தேர்தலில் போட்டியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வன்கொடுமை அல்லது சித்ரவதைக்கு ஆளானோருக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுக்கும். மக்கள் பிரச்சனைக்காக சண்டையிடும் வேட்பாளார்களை நாங்கள் தேர்தலில் நிறுத்துவோம்.
தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் முன்னேற்றத்தை நோக்கி எங்களுடைய பிரச்சாரம் இருக்கும்.
வரலாற்று முக்கியதுவம் பெற்ற இந்த முயற்சியால், உத்தரபிரதேசத்தில் புதிய அரசியலை முன்னெடுக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் கனகசபாபதி
கரவெட்டி கிழக்கு, தெற்கிலுப்பைகுளம், Greenford, United Kingdom
21 May, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருணாசலம் முத்துலிங்கம்
காரைநகர் மாப்பாணவூரி, இராசாவின் தோட்டம், Aubervilliers, France
20 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி அழகு
வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Montreal, Canada, Cornwall, Canada, நல்லூர்
31 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லம்மா இராசையா
புங்குடுதீவு 10ம் வட்டாரம், பிரான்ஸ், France, டோட்மண்ட், Germany
20 May, 2019
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022