கடற்கரையில் திடீரென்று கேட்ட அலறல் சத்தம்: பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
கனெக்டிகட் மாகாணாத்தின் பிரபல கடற்கரையில் இரு இளம் சிறார்களை நீரில் மூழ்கடித்து கொலை செய்ய முயன்ற தந்தையை பொலிசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
உயிருக்கு பயந்து அலறும் சத்தம்
கனெக்டிகட் மாகாணத்தின் மேற்கு ஹெவன் நகரத்தில் கடற்கரைப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் அதிகாரி ஒருவர் ஈடுபட்டுள்ளார். உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 2.30 மணியளவில் Nissan SUV ஒன்று கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்ததை அந்த அதிகாரி கவனித்துள்ளார்.
இந்த நிலையில் திடீரென்று சிறார்கள் உயிருக்கு பயந்து அலறும் சத்தம் கேட்க, அந்த அதிகாரி உடனடியாக வகனம் நிறுத்தப்பட்டிருந்த பகுதிக்கு விரைந்துள்ளார். அங்கே கண்ட காட்சி அந்த அதிகாரியை அதிர்வைத்துள்ளது.
தந்தை ஒருவர் தமது பிள்ளைகள் இருவரை நீரில் மூழ்கடித்து கொல்ல முயன்றுள்ளார். அந்த அதிகாரி அவர்களை நெருங்கவும், அந்த தந்தை இன்னும் ஆழத்திற்கு சென்றுள்ளார். பிள்ளைகள் அப்போதும் அலறியபடியே இருந்துள்ளது.
தந்தை சம்பவயிடத்திலேயே கைது
இந்த நிலையில், உதவிக்கு அப்பகுதியில் இருந்து பொலிசார் சம்பவயிடத்திற்கு வந்து சேர, இறுதியில் அந்த சிறுவர்களை பொலிசார் மீட்டுள்ளனர். பின்னர் முதலுதவி அளிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சனிக்கிழமை நடந்த இச்சம்பவத்தில் சிறார்கள் இருவரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அந்த தந்தை சம்பவயிடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தின் பின்னணி தொடர்பில் பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருவதாகவே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |