அனிருத்தை திருமணம் செய்ய சம்மதம் - ஜோனிடா காந்தி
பிரபல பாடகி ஜோனிடா காந்தியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அனிருத்தை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக பதிலளித்திருக்கிறார்.
அண்மையில் விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட பாடகி ஜோனிடா காந்தியிடம்,ரன்வீர் சிங்,சூர்யா,அனிருத் இவர்கள் மூவரில் யாரை திருமணம் செய்துகொள்வீர்கள் என கேள்வி கேட்க்கப்பட்டது.
அதற்கு ஜோனிடா,சூர்யா,ரன்வீர்சிங் ஆகியோர்களுக்கு திருமணம் ஆகிவிட்டதால் அனிருத்தை திருமணம் செய்ய சம்மதம் என்று தெரிவித்துள்ளர்.
அவர் விளையாட்டாக இந்த பதிலை கூறினாலும், ரசிகர்கள் உங்க ஜோடி பொருத்தம் நன்றாக இருக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இது தற்போது சமூகவலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.