மாதவிடாய் நாட்களில் பெண்கள் மலச்சிக்கலை அனுபவிக்க என்ன காரணம்? இதை எப்படி சரி செய்வது ?
பொதுவாக மாதவிடாய் நேரத்தில் பெண்கள் சந்திக்கும் ஒரு பிரச்சினைகளில் ஒன்று தான் மலச்சிக்கல்.
மாதவிடாய் வருவதற்கு 2-3 நாட்களுக்கு முன்பிலிருந்தே மலச்சிக்கல் பிரச்னை தொடங்கிவிடும்.
இதனால் பெரும் அவஸ்தைப்படுவதுண்டு.
உண்மையில் இதற்கு என்ன காணரம் இதனை போக்க என்ன பண்ணலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
என்ன காரணம்?
ஹார்மோன் பிரச்சனையே காரணம். மாதவிடாய் வருவதற்கு 2-3 நாட்களுக்கு முன்பிலிருந்தே மலச்சிக்கல் பிரச்னை தொடங்கிவிடும்.
அப்போதிலிருந்தே உடலில் புரோகெஸ்ட்ரோன் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கத் துவங்கும்.இந்த ஹார்மோன் உற்பத்தி வயிற்றில் செரிமாண ஆற்றலை குறைக்கும். எனவே இதுதான் மலச்சிக்கலுக்குக் காரணமாக இருக்கலாம்.
இதை எப்படி சரி செய்வது ?
- நார்ச்சத்து அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். தினசரி உணவுப் பழக்கத்தில் சற்று கூடுதலாக நார்ச்சத்து கொண்ட பழங்கள் , காய்கறிகளை சாப்பிட வேண்டும்.
- ஆப்பில், பீன்ஸ், கீரை வகைகள், தானியங்கள், வாழைப்பழம், கேரட், புரக்கோலி, மக்காசோளம்,சியா விதைகள் போன்ற காய்கறிகளை சாப்பிடலாம்.
- உணவு மட்டுமன்றி அதிகமாக தண்ணீர் அருந்துங்கள். அதேபோல் எலுமிச்சையை தண்ணீரில் பிழிந்து குடிப்பதும் மலச்சிக்கலுக்கு நல்லது.