விரைவில் தொடங்கும் குக் வித் கோமாளி சீசன் 6.., புதிய தொகுப்பாளர் யார் தெரியுமா?
தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் அதிக ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சியாக 2020ஆம் ஆண்டில் ஆரம்பித்த குக் வித் கோமாளி விளங்குகிறது.
முதல் சீசன் கொடுத்த வெற்றி அடுத்தடுத்து சீசன்கள் ஒளிபரப்பாகி தற்போது 5வது சீசன் வரை நடந்து முடிந்துள்ளது.
அந்தவகையில், குக் வித் கோமாளியின் ஐந்தாவது சீசன் ஆரம்பிக்கும் போதே, நான்கு சீசன் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.
இதையடுத்து, வெங்கடேஷ் பட்டிற்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக இருந்தார்.
இந்த ஐந்தாவது சீசனில் ரக்ஷன் மற்றும் மணிமேகலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.
பின்னர் மணிமேகலைக்கும், போட்டியாளராக கலந்துகொண்ட பிரியங்காவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அந்நிகழ்ச்சியை விட்டு மணிமேகலை பாதியிலேயே விலகினார்.
இதற்கடுத்து போட்டியாளராக பங்கேற்ற பிரியங்கா குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றார்.
இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது.
இந்நிகழ்ச்சி குறித்து சமீபத்தில் ஷகீலா பேசுகையில், ஒரு நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர் மாதம்பட்டி ரங்கராஜை சந்தித்ததாகவும், அவரிடம் ஆறாவது சீசன் பற்றி கேட்டபோது ஏப்ரல் மாத இறுதியில் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக அவர் கூறினார் என ஷகீலா தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் அந்நிகழ்ச்சி வருகிற மே மாதம் முதல் ஒளிபரப்பப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
அதன்படி இந்த சீசனில் மணிமேகலைக்கு பதில் ரக்ஷனுடன் சேர்ந்து ஜாக்குலின், குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |