திருமணத்தின் நடுவில் மணமகனை கைது செய்த பொலிசார்: அதிர்ச்சியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணமகள்
வெளிநாடொன்றில், திருமணம் நடக்கும்போதே மணமகனை பொலிசார் கைது செய்ய, அதிர்ச்சிக்குள்ளான மணமகளை மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலை ஏற்பட்டது.
திருமணத்தின்போதே மணமகனை கைது செய்த பொலிசார்
ஜேர்மனியில் பிறந்தவரான Gundula B. (40)க்கும் Hamza (27) என்பவருக்கும் ஆஸ்திரியா நாட்டின் வியன்னாவில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் திருமணம் நடைபெற்றது.
Credit: CEN
திருமணம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே தேவாலயத்துக்குள் நுழைந்த புலம்பெயர்தல் பொலிசார் மணமகனான ஹம்ஸாவை கைது செய்தனர். நீண்ட நாட்களாக திட்டமிட்ட தனது வாழ்வின் முக்கியமான நிகழ்வின்போது தனது வாழ்க்கைத்துணையாக வரப்போகிறவரை பொலிசார் கைது செய்ய, அதிர்ச்சியில் உறைந்த Gundulaவை அவரது உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.
காரணம் என்ன?
ஜேர்மனியில் பிறந்த கல்வியாளரான Gundula, வியன்னாவில் 17 ஆண்டுகளாக வாழ்ந்துவருகிறார். தனது மாமாவின் மதுபான விடுதியில் வேலை செய்து வந்த ஹம்ஸாவை அவர் சந்திக்க, இருவரும் காதலில் விழுந்துள்ளார்கள்.
Credit: CEN
ஹம்ஸா, 2022ஆம் ஆண்டிலிருந்து ஆஸ்திரியாவில் வாழ்கிறார். ஆனால், அவரது புகலிடக்கோரிக்கை 10 நாட்களுக்கு முன் நிராகரிக்கப்பட்டுவிட்டது.
ஆகவே, இந்த திருமணம் ஹம்ஸா ஆஸ்திரியாவில் குடியிருப்பு அனுமதி பெறுவதற்காக நடத்தப்படும் ஒரு ஏமாற்றுவேலை என பொலிசார் கருதுகிறார்கள்.
Credit: CEN
ஆனாலும், அவருடைய திருமண நாளின்போது பொலிசார் மணமகனை கைது செய்ததால் ஆஸ்திரிய ஊடகங்கள் பொலிசாரை கடுமையாக விமர்சித்துவருகின்றன.
இதற்கிடையில், ஹம்ஸா சில நாட்களில் நாடுகடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |