உடல் எடையை சரசரவென குறைக்க வேண்டுமா? இந்த அற்புத பானத்தை குடிச்சு பாருங்க.. விரைவில் பலன் கிடைக்கும்
பொதுவாக உடல் எடையைக் குறைக்க பல்வேறு பானங்கள் உதவி புரிகின்றன.
அதிலும் இஞ்சி மற்றும் கொத்தமல்லி கொண்டு தயாரிக்கப்படும் பானம் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவி புரிகின்றது.
அதற்கு ஆரோக்கிய உணவுப் பழக்கத்துடன், உடற்பயிற்சிகளை தவறாமல் மேற்கொண்டு, அந்த பானத்தை தினமும் குடித்து வர வேண்டும்.
இப்போது இந்த பானத்தை எப்படி தயாரிப்பது என்பதை பற்றி பார்ப்போம்.
இஞ்சி-மல்லி நீரைத் தயாரிப்பது எப்படி?
1/2 இன்ச் இஞ்சி மற்றும் 1 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகளை ஒரு டம்ளர் நீரில் போட வேண்டும்.
இரவு முழுவதும் நீரில் அப்பொருட்களை ஊற வைக்க வேண்டும்.
மறுநாள் காலையில் அந்த நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின் அந்நீரை வடிகட்டி குடிக்க வேண்டும்.
எப்போது குடிக்க வேண்டும்?
இஞ்சி-மல்லி நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி வெறும் வயிற்றில் குடிக்கும் போது, அந்நீரில் உள்ள சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைத்து, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைய ஆரம்பித்து, உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.