ஜேர்மனியில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்களின் நிலை என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்
ஜேர்மனியில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
ஜேர்மனிய மாநிலமான பவேரியா மாநிலத்தின் சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பை வெளியியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கி இறப்போரில் இரண்டு தடுப்பு மருந்தையும் பெற்றோரின் விகிதம் அதிகரித்து உள்ளது.
இந்த எண்ணிக்கையானது அக்டோபர் மாதத்தில் 30 விகிதமாக இருந்தது. இருப்பினும் அவர்கள் இறந்ததற்கு கட்டாயம் கொரோனா தான் காரணம் என்று கூற முடியாது.
இறந்தவர்களில் பலர் வேறு பல நோயாலும் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். இருப்பினும் மொத்தம் 372 இறந்தவர்களில் 108 பேர் முழுமையாக கொரோனா தடுப்பூசியை பெற்று இருந்தனர்.
இந்நிலையில் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்த பாதிப்பு சற்று குறைந்து 26 ஆக உள்ளது. பலியான 88 பேரில் 23 பேர் முழுமையாக கொரோனா தடுப்பூசியை பெற்று இருந்தனர்.
அதே வேளை இரண்டு தடுப்பு மருந்தையும் பெற்றவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் 80 வயதை அடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.