ஜேர்மனியை மிரட்டும் கொரோனா 4வது அலை! ஒரே நாளில் இவ்வளவு பாதிப்பா? அதிர்ச்சியூட்டும் புள்ளி விவரங்கள்
ஜேர்மனியில் ஒரே நாளில் 37,111 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பயங்கர தீவிரமாக பரவி உள்ளது. சில பகுதிகளில் கொரோனா ஏற்றமாகவும் மற்ற பகுதிகளில் இறக்கமாக காணப்படுகின்றது. தற்போது இந்த தொற்று நோய் ஐரோப்பிய நாடுகளில் மையம் கொண்டுள்ளது.
இந்நிலையில் ஜேர்மனியில் நேற்று ஒரே நாளில் 37 ஆயிரத்து 111 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இத்துடன் சேர்த்து அந்த நாட்டில் இந்த தொற்றுக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 53 லட்சத்து 30 ஆயிரத்து 138 ஆக அதிகரித்துள்ளது.
அது மட்டும் இல்லாமல் ஒரே நாளில் 126 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதுவரை அங்கு 99 ஆயிரத்து 525 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவில் இருந்து 46.10 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து உள்ளனர். 6.20 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
ஜேர்மனியில் கொரோனா 4வது அலை தாக்கி இருப்பதாக அதிபர் ஏஞ்சலா மெர்கல் அறிவித்துள்ளார். அந்நாடு முழுவதும் 4வது அலையை தீவிரமாக பரவி வருவதால் மக்கள் பயங்கர அச்சத்தில் உறைந்துள்ளனர்.