கோடை நன்றாக இருக்கும்... ஜேர்மன் மாகாணங்களில் நான்கில் ஒன்றில் பெருமளவில் கொரோனா தொற்று குறைந்துள்ளது கண்டுபிடிப்பு
ஜேர்மன் மாகாணங்களில் நான்கில் ஒரு மாகாணத்தில் பெருமளவில் கொரோனா தொற்று குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு, நாட்டின் மூன்றாவது கொரோனா அலை முடிவுக்கு வருவதை தெரியப்படுத்துவதாக கருதப்படுகிறது.
Robert Koch நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில், ஜேர்மனியின் 412 மாவட்டங்களில், 103இல் 100,000 பேரில் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 100ஐ விட குறைந்துள்ளது.
இதுவே, ஒரு வாரத்திற்கு முன்பு 100,000 பேரில் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 100ஐ விட குறைவாக இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை 57 ஆகத்தான் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மாகாணங்களைப் பொருத்தவரையிலும் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. ஆக, மொத்தமாக நாட்டு நிலவரத்தைப் பார்க்கும்போது, பாசிட்டிவான அறிகுறிகளைக் காணமுடிகிறது எனலாம். இன்று, ஒரு நாளில் ஜேர்மனியில் 7,534பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுவே,சென்ற வார நிலவரப்படி,நாளொன்றிற்கு புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 10,976 ஆக இருந்ததையும் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.
மக்கள் தங்கள் நடவடிக்கைகளை மாற்றியுள்ளதும், சமூக விலகல் விதிகள் முதல், கட்டுப்பாடுகளை கவனமாக பின்பற்றியதும்தான் இதற்கு காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
அத்துடன், தடுப்பூசிகளும் புதில் முக்கிய பங்காற்றியுள்ளன. இப்போதே இந்த அளவுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும் நிலையில், தடுப்பூசிகள் உண்மையாக பலனளிக்க இன்னும் நேரம் எடுக்கும் என்பதால், இந்த மாத இறுதியில் இன்னும் நல்ல விளைவுகளைக் காணலாம் என்கிறார்கள் அவர்கள். மொத்தத்தில், கோடை நன்றாக இருக்கும் என்கிறார்கள் அவர்கள், இருக்கட்டும்!