அதிகரிக்கும் பலி எண்ணிக்கையால் தடுமாறும் ஐரோப்பா: அபாய அளவில் நெருக்கடி
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்புக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐரோப்பியாவுக்கான அந்த அமைப்பின் மண்டல இயக்குநா் ஹன்ஸ் கிளக் வியாழக்கிழமை தெரிவிக்கையில்,
கொரோனா பலி எண்ணிக்கையில் ஐரோப்பா 10 லட்சத்தைத் தாண்டி விட்டது. இந்தப் பிராந்தியத்தில் ஒவ்வொரு வாரமும் 16 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
எனவே, ஐரோப்பாவில் கொரோனா நெருக்கடி இன்னும் அபாய அளவிலேயே இருக்கிறது. பிராந்தியத்தில் கொரோனாவின் தீவிரம் தணிவதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன.
அந்த நோய்க்கு முதியவா்கள் பலியாகும் சம்பவங்களும் குறைந்து வருகின்றன. முதியவா்கள் உள்ளிட்ட கொரோனா பலி அபாயம் அதிகமிருப்பவா்களுக்கு அந்த நோய்க்கு எதிரான தடுப்பூசி போடப்படுகிறது.
இதன் விளைவாக, 80 வயதுக்கும் மேற்பட்டவா்கள் கொரோனாவுக்கு பலியாகும் சம்பவங்கள் 30 சதவீதம் குறைந்துள்ளன என்றாா் அவா்.