ஜாக்கிரதையா இருங்க.. இப்படி தான் கொரோனா மற்றவருக்கு பரவுகிறதாம்! வெளியான அதிர்ச்சி தகவல்
கொரோனா ஒருவரை தாக்கிய பிறகு அது மற்றவரிடம் எப்படி பரவுகிறது குறித்து ஆய்வில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
2019ஆம் ஆண்டு சீனாவில் உள்ள உகான் நகரில் தான் கொரோனா வைரஸ் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது.
அதுமட்டும் இல்லாமல் உருமாறிய வைரஸ் பல நாடுகளை கொடூரமாக தாக்கி வருகின்றது. இந்த வைரஸை தீர்த்து கட்ட உலக நாடுகள் போராடி வருகின்றது. கடைசியில் அனைவருக்கும் பெரும் நம்பிக்கையாக இருந்து வருவது கொரோனா தடுப்பூசி மட்டுமே.
இந்நிலையில் கொரோனா தொற்று ஒருவரை தாக்கிய பிறகு அவர் மூலம் மற்றவர்களுக்கு எப்படி பரவுகிறது என்பதை தெரிந்துகொள்ள சீனாவில் ஒரு ஆய்வு நடந்தது. கொரோனா பாதித்தவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 9 ஆயிரம் பேரை கண்டறிந்து ஆய்வு நடத்தினர்.
ஒரே வீட்டில் வசிப்பவர்கள், ஒன்றாக சாப்பிடுபவர்கள், ஒன்றாக வேலை செய்கிறவர்கள், வாகனத்தில் ஒன்றாக பயணிப்பவர்கள் போன்றவர்களை சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா தொற்றுக்கு ஆளாக வாய்ப்பு உள்ளது என்பது உறுதியானது.
கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு அறிகுறிகள் தெரியத்தொடங்குவதற்கு முந்தைய 2 நாட்களும் மற்றும் அறிகுறி தெரிந்த பின்னர் 3 நாட்களும் அவர்களால் மற்றவர்களுக்கு கொரோனா தொற்று பரவ வாய்ப்பு அதிகமாக உள்ளது என தெரியவந்தது.
ஆனால் 89 சதவீதத்தினர் மிகக்குறைவான, மிதமான பாதிப்புகளை கொண்டிருந்தது தெரிய வந்தது. 11 சதவீதத்தினர் அறிகுறியற்றவர்கள், ஒருவர் கூட தீவிரமாக பாதிக்கப்படவில்லை என்பது உறுதி செயய்யப்பட்டுள்ளதாக ஆய்வில் வெளியாகியுள்ளது.