ஜேர்மனியில் புதிதாக அறிமுகமாகும் கொரோனா பயண விதிகள்
ஜேர்மனியில் புதிதாக கொரோனா பயண விதிகள் அறிமுகமாகின்றன. அதன்படி, கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களும், கொரோனாவிலிருந்து விடுபட்டவர்களும் ஒரே விதமாக நடத்தப்படுவார்கள் என ஜேர்மனி அரசு அறிவித்துள்ளது.
திடீர் மாற்றம் பெற்ற கொரோனா பரவல் உள்ள நாடுகளிலிருந்து வருபவர்கள் தவிர்த்து, தடுப்பூசி போட்டதற்கு அல்லது கொரோனாவிலிருந்து விடுபட்டதற்கான ஆதாரம் வைத்திருக்கும் மற்றவர்கள் ஜேர்மனிக்குள் வந்ததும் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதைக் காட்டும் பரிசோதனை முடிவுகளை சமர்ப்பிக்கவேண்டியதில்லை.
உலகின் பல நாடுகளில் கொரோனா நிலைமை மோசமாக இருந்து வரும் நிலையில், அதிக அபாய நாடுகளிலிருந்து வருவோர் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளத்தான் வேண்டும்.
அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆவணத்தை சமர்ப்பித்தால் ஐந்து நாட்களில் அவர்கள் தனிமைப்படுத்தலிலிருந்து வெளியே வரலாம்.
அதேநேரத்தில், திடீர் மாற்றம் பெற்ற கொரோனா பரவல் உள்ள நாடுகளிலிருந்து
வருபவர்கள், ஜேர்மனிக்குள் நுழைவதற்கு முன் குறைந்தது 10 நாட்களுக்கு தங்களை
தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.
இந்த புதிய விதிகள் மே மாதம் 13ஆம் திகதி அமுலுக்கு வருகின்றன.