ஜேர்மனியில் கொரோனா தடுப்பூசி கட்டாயம்... சுகாதாரத்துறை அமைச்சர் வலியுறுத்தல்
ஏப்ரல் அல்லது மே மாதத்திலிருந்து ஜேர்மனியில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்படவேண்டும் என ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
ஜேர்மனியில் கொரோனா தொற்று வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சரான Karl Lauterbach, ஜேர்மனியில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அதுவும், இந்த ஆண்டின், அதாவது 2022இன் முதல் பாதிக்குள்ளேயே, அந்த விதி அமுல்படுத்தப்படவேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.
வரும் இலையுதிர்காலத்தில் மீண்டும் ஒரு கொரோனா அலை உருவாகலாம் என கருதப்படும் நிலையில், கொரோனா தடுப்பூசி பெறாதவர்களில் எவ்வளவு பேருக்கு தடுப்பூசி வழங்க முடியுமோ, அத்தனை பேருக்கும் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வகையில், தடுப்பூசி கட்டாயம் என்னும் விதி விரைவில் அமுலுக்கு வரும் என்று கூறியுள்ளார் Lauterbach.
பலனைக் கொடுக்கும் ஒரு மசோதாவை நாம் கொண்டு வரவேண்டுமானால், அது கொரோனா தடுப்பூசியைக் கட்டாயமாக்கும் ஒரு மசோதாதான் என்று கூறியுள்ள Lauterbach, ஏப்ரல் அல்லது மே மாதத்தில் அதை அமுல்படுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த விதி தொடர்பான முதல் விவாதம், ஜேர்மன் நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் வாக்கில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.