உணவுப் பொருட்களின் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா? WHO வெளியிட்ட எச்சரிக்கை செய்தி
நாம் சமைக்கும் உணவுப் பொருட்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளதுடன், புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் ஒரு மனிதனிடமி இருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவும் தன்மை கொண்டது என்பதால், முகக்கவசம், அடிக்கடி கை கழுவுதல், சமூக இடைவெளி முக்கியம் என்பது அறிவுறுத்தப்படுகிறது.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு நாம் சமைக்கும் உணவுப் பொருட்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. இதனால் நாம் சமைக்கும் முன்னெச்சரிக்கையுடன் என்னென்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
கடைகளில் இருந்து உணவுப் பொருட்களோ அல்லது இறைச்சியோ வாங்கி வந்தால், அதை சரியான வெப்ப நிலையில் சேமித்து வைக்க வேண்டும். அப்போது தான் அந்த பாதுகாப்பாகவும் இருக்கும், நுண்ணுயிரிகளால் பாதிப்பும் நேராது.
சமைத்த உணவுகளை இரண்டு மணி நேரத்திற்கு மேல் திறந்து வைக்கக்கூடாது. அதே போன்று சீக்கிரம் கெட்டுப் போகும் உணவுகளை ப்ரிட்ஜில் வைக்கும் போது, அதை 5 டிகிரி வெப்ப நிலையிலே சேமித்து வைக்கலாம்.
அதே போன்று சமைத்த இறைச்சிகளை நீண்ட நேரம், ப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால், அதன் வாசம் குளிர்சாதன பெட்டியில் இருக்கும் மற்ற பொருட்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஒரு சிலர் இறைச்சி வகைகளை அதிகமாக வாங்கி வந்து அவ்வப்போது பயன்படுத்துவார்கள். அப்படி வாங்கி வந்த இறைச்சியையும், சமைத்த இறைச்சியையும் அருகருகே வைக்கக்கூடாது.
இரண்டையும் வெவ்வேறு இடங்களில் வைத்திருப்பது தான் நல்லது.
முட்டை, கோழி இறைச்சி, மீன் போன்ற கடல் உணவுகளில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், மற்றும் வைரஸ்கள் போன்றவை இருக்கலாம் என்பதால்,அவற்றை சமைத்த இறைச்சியோடு சேர்த்து வைத்திருந்தால் தொற்று ஏற்படவழிவகுத்து விடும்.
முட்டை, கோழி இறைச்சி, மீன் போன்ற கடல் உணவுகளை சமைக்கும்போது குழம்பு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அவை நன்றாக வேகவைக்கப்படவில்லை என்று அர்த்தம். நன்றாக சமைத்தால் தான் தீங்குவிளைவிக்கும் நுண் கிருமிகள் இறந்துபோகும். 70 டிகிரி வெப்ப நிலையில் சமைத்தால்தான் அது நன்றாக சமைக்கப்பட்ட உணவு .
சமைக்கும்போது இறைச்சியை நன்றாக சுத்தம் செய்வது மட்டுமின்றி, கைகளையும் நன்றாக கழுவ வேண்டும். சமையல் அடுப்பின் மேல்பகுதியையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். சமைக்கும் முன்பு கைகளை கழுவ வேண்டியதும் அவசியம்.
கரப்பான் பூச்சிகள் மற்றும் பிற பூச்சி இனங்களிலிருந்து சமையலறையைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். அவைதான் தீங்கு விளைவிக்கும் தொற்று நோய்களுக்கு முதன்மை காரணியாக அமைந்திருக்கும்.
உணவு தயாரிக்கும் போது எப்போதும் சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் சுத்தமில்லாத நீர் உணவை மாசுபடுத்தும். தொற்றுநோயை ஏற்படுத்தும். உணவுப் பொருட்களை கழுவும் போது நன்றாக வடிகட்டிய நீரைப் பயன்படுத்த வேண்டும்.