கனடாவில் கிராமப்புற பகுதியின் நிலத்தில் சடலம் கிடப்பதை பார்த்த நபர்! விரைந்து வந்த பொலிஸார்
கனடாவில் நிலத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
தென்மேற்கு மணிடோபாவின் கிராமபுற நகராட்சியான சோரிஸ்-க்ளென்வுடில் சடலம் இருப்பதை நபர் ஒருவர் கண்டு பொலிசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதை தொடர்ந்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றினார்கள்.
உயிரிழந்த நபரின் பாலினம், வயது மற்றும் இன்னபிற விபரங்களை பொலிசார் இன்னும் வெளியிடவில்லை.
இது சந்தேகத்துக்குரிய மரணமா என்ற தகவலும் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
பொலிசாருடன் தடயவியல் நிபுணர்கள், மருத்துவ பரிசோதகர் ஆகியோரும் விசாரித்து வரும் நிலையில் விரைவில் மேலதிக தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.