இது நடந்திருந்தால் முடிவு மாறியிருக்கலாம்! இலங்கை தோல்விக்கு பின் பேசிய மஹமதுல்லா
இலங்கை அணிக்கெதிரான தோல்விக்கு பின், நாங்கள் தவறுகளை திருத்த விரும்புவதாக கூறியுள்ளார். உலகக்கோப்பை சூப்பர் 12 ஆட்டம் நேற்று முதல் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை-வங்கதேச அணிகள் மோதின. இப்போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இப்போட்டி முடிந்த பின்பு வங்கதேச அணியின் கேப்டன் மகமதுல்லா இது குறித்து கூறுகையில், இந்த தோல்வியின் மூலம் நாங்கள் பாடம் கற்றுக் கொண்டதாகவும், அடுத்த போட்டியில் மீண்டும் ஒரு வலுவான அணியாக வருவோம் என்று கூறினார்.
மேலும், இன்றைய போட்டியில் எங்களுடைய பேட்டிங் சிறப்பாக இருந்தது. துவக்கம் நன்றாக இருந்தது. முஸ்தபிசுர் ரஹீம் ஒரு அற்புதமான ஆட்டத்தை கொடுத்தார். ஒரு சில வாய்ப்புகளை நாங்கள் இழந்துவிட்டோம். அடுத்த ஆட்டத்தில் இதை எல்லாம் சரி செய்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக சுழற்பந்து வீச்சி இங்கு நன்றாக இருக்கும் என்பதை உணர்ந்தோ. அதே போன்று நடந்தது, ஆனால் சில இடங்களில் சொதப்பிவிட்டோம்(கேட்சுகளை தவறவிட்டது), அதுமட்டும் நடந்திருந்தால் போட்டியின் முடிவு வெறு கதையாக மாறியிருக்கும், அடுத்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று நம்புவதாக கூறினார்.