லண்டனை விட்டு வெளியேறிவரும் ஆயிரக்கணக்கான மக்கள்: காரணம் என்ன?
ஆயிரக்கணக்கானோர் லண்டனை விட்டு வெளியேறிவருவதை தேசிய புள்ளியியல் அலுவலகம் உறுதி செய்துள்ளது.
லண்டனை விட்டு வெளியேறிவரும் மக்கள்
லண்டனை விட்டு ஆயிரக்கணக்கானோர் வெளியேறிவருவதை உறுதி செய்துள்ள தேசிய புள்ளியியல் அலுவலகம், 1980களுக்குப் பிறகு, கோவிட் காலகட்டம் தவிர்த்து, இந்த அளவுக்கு லண்டன் மக்கள்தொகை குறைந்துள்ளது இப்போதுதான் என்கிறது.

2025ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், சுமார் 27,000 பேர் லண்டனை விட்டு வெளியேறியுள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆக, 2024ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 9,149,646 ஆக இருந்த லண்டன் மக்கள் தொகை, 2025ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், 9,122,909 ஆக குறைந்துள்ளது.
காரணம் என்ன?
இப்படி ஆயிரக்கணக்கான மக்கள் லண்டனை விட்டு வெளியேற முக்கிய காரணம், விலைவாசி உயர்வுதான்!
சமீபத்தில், Deutsche Bank Research Institute என்னும் ஆய்வமைப்பு மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகள், பிரித்தானியாவில் மட்டுமல்ல, உலகிலேயே விலைவாசி அதிகமான பல நகரங்களைவிட லண்டனில் விலைவாசி அதிகம் என்று கூறியுள்ளது.

பிரித்தானியாவைப் பொருத்தவரை, எடின்பர்கிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றின் ஒரு சதுர மீற்றர் பரப்பின் விலை 5,019 பவுண்டுகள்.
பர்மிங்காமில் ஒரு சதுர மீற்றர் பரப்பின் விலை 4,045 பவுண்டுகள். அதே நேரத்தில், லண்டனிலோ, ஒரு சதுர மீற்றர் பரப்பின் விலை 14,982 பவுண்டுகள்!
அத்துடன், போக்குவரத்துச் செலவும் லண்டனில் அதிகம் என்கிறது, Deutsche Bank Research Institute ஆய்வமைப்பு.
லண்டன், நியூயார்க், பாரீஸ் மற்றும் ஹொங்ஹொங் ஆகிய நகரங்கள் உலகின் திறமைசாலிகளையும் முதலீட்டையும் கவர்ந்திழுப்பது என்னவோ உண்மைதான். ஆனால், வீடுகள் விலை அல்லது வாடகை, காற்று மாசு, தினசரி நீண்ட பயணம் மற்றும் விலைவாசி ஆகிய விடயங்கள் இந்த நகரங்களின் வாழத்தகுந்த தன்மைக்கான மதிப்பெண்களை குறைத்துவிடுகின்றன என்கிறார்கள் ஆய்வாளர்களான Jim Reid மற்றும் Galina Pozdnyakova.
அதாவது, படிப்பினை என்னவென்றால், விலைவாசி உயர்ந்த நகரங்கள் என்பதால் மட்டுமே, அவை வாழத் தகுந்த நகரங்களாகிவிடாது என்கிறார்கள் அவர்கள்.
ஆக, விலைவாசி உயர்வால், ஆயிரக்கணக்கான மக்கள் லண்டனை விட்டு வெளியேறி வருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |