லாஸ் ஏஞ்சல்ஸ் பயங்கர வெடிவிபத்தில் ஷெரிப் மூவர் மரணம்! சிறந்த ஹீரோக்களை இழந்துவிட்டோம் - ஷெரிப் துறை
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் ஷெரிப் பிரதிநிதிகள் மூவர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கர விபத்து
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் the LASD's Biscailuz மைய பயிற்சி அகாடமியில் உள்ளூர் நேரப்படி காலை 7.30 மணியளவில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
இதனால் பயங்கர தீ உண்டானது.
இந்த விபத்தில் ஷெரிப் பிரதிநிதிகள் மூவர் உயிரிழந்தனர். அவர்கள் டிடெக்டிக் ஜோஷ்வா கெல்லி, டிடெக்டிவ் விக்டர் லேமஸ் மற்றும் டிடெக்டிக் வில்லியம் ஆஸ்போர்ன் என அடையாளம் காணப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் துறையின் உயரடுக்கு சிறப்பு அமலாக்கப் பணியக தீ விபத்து விவரப் பிரிவின் உறுப்பினர்கள் என தெரிய வந்தது. தீ விபத்திற்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை
இந்நிலையில் விபத்து குறித்து ஷெரிப் ராபர்ட் லூனா கூறுகையில், "நாங்கள் உணரும் வலி மற்றும் துக்கத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. இந்த ஹீரோக்கள் எங்கள் துறையின் சிறந்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தினர்.
தைரியம், நேர்மை மற்றும் தன்னலமற்ற சேவையை எடுத்துக்காட்டுகின்றனர்.
இது அவர்களின் குடும்பங்களுக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் ஒரு மனவேதனையை தரும் இழப்பாகும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |