வீடியோவை பார்த்து அதிர்ந்த பொலிசார்! கைது செய்யப்பட்ட இளம்தம்பதி.. அம்பலமான மோசமான குற்றம்
அமெரிக்காவில் குழந்தையை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வீடியோ எடுத்த இளம் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
யார்க் சிட்டியை சேர்ந்த தம்பதி மரிசெல் டொரோ (20) மற்றும் வயட் ஜோன்ஸ் (25). இருவரும் சேர்ந்து மூன்று மாத குழந்தையை ஆபாசமாக வீடியோ எடுத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியும் வந்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ ஒரு செயலில் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில் அதை பார்த்து பொலிசார் அதிர்ந்தனர்.
பின்னர் மரிசெல் மற்றும் வயட் முகவரியை கண்டுபிடித்த பொலிசார் அவர்களை கைது செய்துள்ளனர்.
மேலும் அவர்கள் வசித்த வீட்டில் இருந்த மூன்று மாத குழந்தையும் மீட்கப்பட்டது. பொலிசில் வயட் அளித்த வாக்குமூலத்தில் குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் இருந்தே இவ்வாறு துன்புறுத்தி வந்தோம் என கூறி அதிரவைத்துள்ளார்.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.