உன்னை பற்றி மாப்பிள்ளைக்கு தெரிந்தால் என்ன ஆகும் நினைத்து பார்! திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மிரட்டிய தம்பதி... உயிரைவிட்ட அதிர்ச்சி சம்பவம்
தமிழகத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் அதற்கு காரணமான ஆண் மற்றும் பெண் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடவாசல் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் தீபா (26). இவர் பிஎஸ்சி பட்டதாரி ஆவார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீபா தண்ணீர் பிடிப்பதற்கு வீட்டின் அருகே செல்லும்பொழுது பக்கத்து வீட்டில் வசித்து வரும் பாமா மற்றும் பிரபுதாஸ் ஆகிய இரண்டு பேரிடம் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த பாமா,பிரபுதாஸ் ஆகிய இருவரும் உன்னைப்பற்றி திருமணம் நிச்சயித்த மாப்பிள்ளையிடம் தவறாக கூறி விடுவோம், உன்னை பற்றி தவறாக மாப்பிள்ளைக்கு தெரிந்தால் என்ன ஆகும் என நினைத்து பார் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக மனமுடைந்த தீபா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இது தொடர்பாக பெண்ணின் தாய் கலாவதி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் தீபா உடலை கைப்பற்றினார்கள்.
மேலும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து பாமா மற்றும் பிரபுதாஸ் உள்ளிட்ட இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.