பிரித்தானியாவில் இருந்து வேறொரு நாட்டிற்கு விமானத்தில் சென்ற தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி! எச்சரிக்கை செய்தி
பிரித்தானியாவைச் சேர்ந்த தம்பதியினர் ஆசையாக ஸ்பெயினுக்கு விமானத்தில் சென்ற நிலையில், அவர்கள் அங்கு தரையிரங்கிய பின்பு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.
Humaira மற்றும் Farooq Shaikh ஜோடி, ஸ்பெயினுக்கு செல்வதற்காக விமானத்தில் ஏறியுள்ளனர். ஆனால், அவர்கள் தரையிறங்கிய விமானநிலையத்தில், இருந்த டிரைவர் இது கிரீஸ் என்று சொன்ன போது அவர்கள் கிரிசில் தரையிரங்கிருப்பதை உணர்ந்தனர்.
இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கடந்த அக்டோபர் மாதம் 4-ஆம் திகதி Humaira மற்றும் Farooq Shaikh தம்பதியினர், ஸ்பெயின் பயணத்திற்காக Stansted விமானநிலையத்திற்கு வந்துள்ளனர்.
அப்போது அவர்கள் வழக்கமான போர்டிங் பாஸ்கள் காண்பிப்பது உட்பட அனைத்து சோதனைகளையும் தாண்டி விமானத்தில் ஏறியுள்ளனர். விமானம் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டதால், விமானம் செல்லும் இடத்தை விமான குழுவினர் அறிவிக்கவில்லை.
விமானநிலையத்திற்கு சென்று இறங்கிய பின்னரே அவர்கள் கிரிஸில் தரையிரங்கியதை உணர்ந்தனர். அவர்களின் தொலைப்பேசி கிரிஸுக்கு வரவேற்கிறோம் என்று கூறியுள்ளது.
அதுமட்டுமின்றி அந்த விமான நிலையத்தில் இருந்த, டாக்ஸி டிரைவர் ஒருவர் இது ஸ்பெயின் அல்ல கிரீஸ் என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக விமானநிலையத்திற்கு சென்ற போது, குறித்த விமான ஊழியர்கள் இதைக் கேட்டு சிரித்துள்ளனர்.
மேலும் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கூறியுள்ளனர். இது குறித்து Humaira கூறுகையில், நாங்கள் Ryanair விமானத்தில் வந்தோம். இது குறித்து கூறிய போது, அவர்கள் ஒருநாள் இரவு தங்குவதற்கான தேவைகளையும், பிரித்தானியா திரும்புவதற்கும் உதவி செய்ய முன் வந்தது.
ஆனால், அடுத்து விமானம் நான்கு நாட்களுக்கு பின்னர் தான், இதனால் நாங்கள் மீதமுள்ள மூன்று நாட்களுக்கு தங்குவதற்கான பணத்தை கட்ட வேண்டும். அதன் பின் இவர்களின் மகன் மூலம் அவர்கள் திரும்பியுள்ளனர்.
இந்த தம்பதியின் மகன் ஆன Suleman கூறுகையில், இதைக் கேள்விபட்டவுடன் கடும் அதிர்ச்சியடைந்தேன். இது பாதுகாப்பு, மற்றும் பொறுப்பின் முழுமையான பற்றாக்குறையை வெளிப்படுத்துகிறது.
இது எனது பெற்றோருக்கு கடுமையான மன அழுத்தத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. என் அம்மா ஏற்கனவே மனஉளைச்சல் மற்றும் பதட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் கிரிசில் இருந்த படி அழுது கொண்டே பேசிய போது, எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது.
இந்தச் சம்பவத்தின் மூலம் சுமார் 1,100 பவுண்ட் செல்வானதாக கூறிய அவர், இது குறித்து Ryanair நிறுவனம் மன்னிப்பு கேட்கவோ அல்லது இழப்பீடு வழங்கவோ மறுத்துவிட்டதாக கூறியுள்ளார்.
இது குறித்து Ryanair செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சரியான விமானத்தில் ஏறுவதை உறுதி செய்வது ஒவ்வொரு வாடிக்கையாளரின் பொறுப்பாகும்.
இந்தப் பயணிகள் பாதுகாப்புக் கட்டுப்பாட்டு முன் போர்டிங் வழியாகச் சென்றதால், பாதுகாப்பு ஆபத்து இல்லை.
இந்தப் பிழை மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய, தகுந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறியுள்ளார்.