விமான விபத்தில் உயிர்தப்பிய அடுத்த 5வது நாள் திருமணம் செய்து கொண்ட விமானி - துணை விமானி! சுவாரசிய பின்னணி
அமெரிக்காவில் விமான விபத்தில் இருந்து உயிர் தப்பிய விமானியும், துணை விமானியும் அடுத்த 5 நாட்களில் திருமணம் செய்து கொண்ட சம்பவத்தின் சுவாரசிய பின்னணி வெளியாகியுள்ளது.
வாஷிங்டனின் போத்தில் நகரை சேர்ந்தவர் அலீன் கிங். இவருக்கும் ரோசினா என்ற பெண்ணிற்கு ஓராண்டுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 20ஆம் திகதி சிறிய ரக விமானத்தில் அலீனும், ரோசினாவும் பயணம் செய்தனர். அலீன் தான் விமானத்தை இயக்கினார்.
அப்போது நடுவானில் விமானத்தில் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதையடுத்து இருவரும் பயந்து போனார்கள். இதையடுத்து எப்படியாவது விமானத்தை பத்திரமாக தரையிறக்க இருவரும் நினைத்தனர்.
king5
அந்த பகுதியில் உள்ள தெருக்களில் மக்கள் மற்றும் வீடுகள் அதிகம் இருந்த நிலையில் எந்த இடத்தில் தரையிறக்குவது என தெரியாமல் தவித்தார் அலீன். பின்னர் எப்படியோ விமானம் கீழே இறக்கப்பட்டது. இதில் இருவருக்கும் சிறிய அளவு காயங்கள் ஏற்பட்டது.
இந்த சம்பவம் நடந்த அடுத்த ஐந்தாவது நாள் அலீனும், ரோசினாவும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ரோசினா கூறுகையில், அந்த இரவில் பல உயிர்களைக் காப்பாற்றிய ரியல் ஹீரோ அலீன். இந்த சம்பவம் எங்கள் உறவை பலப்படுத்தியது என்று நினைக்கிறேன்.
விமானத்தில் இருந்தது மிகவும் பீதியான தருணமாகும். நான் தனியாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்று என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என கூறியுள்ளார்.