தேடி வந்த அதிர்ஷ்டத்தை வீணடித்த ஜோடி! 182 மில்லியன் ஜாக்பாட்டை இழந்து நிற்கும் சோகம்
பிரித்தானியாவில் ஒரு சிறிய அஜாக்கிரதையால் லொட்டரி பரிசை தவறவிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
பிரித்தானியாவில் கடந்த வெள்ளிக் கிழமை 174 மில்லியல் பவுண்டிற்கான லொட்டரி டிக்கெட்டை , யாரும் வாங்காமல் போனது மிகப் பெரும் வியப்பை ஏற்படுத்தியது.
இதே போன்று இந்த ஆண்டும் 182 மில்லியனுக்கான பரிசுத் தொகையை ஒரு இளம் தம்பதி, தங்களுடைய துரதிருஷ்டவசத்தால் இழந்துள்ளனர்.
இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், பிரித்தானியாவின் Hertfordshire-ஐ சேர்ந்த Rachel Kennedy(19)-Liam McCrohan(21) தம்பதி, இந்த ஆண்டின் மார்ச் மாதத்த்தில் 182 யூரோ மில்லியன் ஜாக்பாட்டை இழந்ததாக வேதனையுடன் கூறியுள்ளனர்.
இவர்கள் எப்போதும் வழக்கமாக தங்களுடைய எண்களான 6, 12, 22, 29, 33, 6 மற்றும் 11 எண் கொண்ட லொட்டரி டிக்கெட்டையே வாங்கி வந்துள்ளனர். இதற்காக அவர்கள் தொடர்ந்து ஐந்து வாரங்கள் இந்த எண்ணை குறிப்பிட்டு வைத்துள்ளனர்.
இதனால், அவர்கள் தங்கள் வங்கிக் கணக்கை அதனுடன் சேர்த்துள்ளனர். அதாவது ஒவ்வொரு முறையும், லொட்டரிக்கான பணத்தை வங்கியில் இருந்து எடுத்து கொள்ளப்படும். அப்படி ஒரு முறை இவர்களின் இந்த லொட்டரி எண் விழுந்துவிட, பெரும் மகிழ்ச்சியில் இருந்துள்ளனர்.
ஆனால், அந்த எண் கொண்ட லொட்டரி டிக்கெட்டிற்கு தேவையான பணம் இவர்கள் இணைத்த வங்கியின் கார்டில் இல்லாத காரணத்தினால், அந்த டிக்கெட்டை இவர்களால் பெறமுடியவில்லை.
இதனால் இந்த தம்பதியினர் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இது குறித்து Rachel Kennedy கூறுகையில், நான் இதை அறிந்தவுடன், உடனே என் அம்மா மற்றும் காதலனை அழைத்தேன்.
உடனே நான் 182 மில்லியன் வென்றுவிட்டேன் என்று நினைத்து, அந்த எண்ணிற்கு அழைத்தேன்.
அப்போது அவர்கள் ஆம் நீங்கள் சொல்வது உண்மை தான், ஆனால் டிக்கெட்டிற்கு செலுத்துவதற்கான பணம் உங்கள் கணக்கில் இல்லை என்று கூறினர்.
நான் வென்றுவிட்டேன் என்று நினைத்து எல்லையற்ற மகிழ்ச்சியில் இருந்தேன். ஆனால் அதுவே இல்லை என்று தெரிந்தவுடன் உண்மையிலே மனம் உடைந்து போய்விட்டேன் என்று கூறியுள்ளார்.