கரூரில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசு வேலை ரத்து - நீதிமன்றம் தீர்ப்பு
கரூரில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு வழங்கிய அரசு வேலையை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கரூரில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் திகதி கரூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
கடந்த ஜூலை 10 ஆம் திகதி கரூர் சென்ற முதல்வர் விஜய், இதில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு அரசுப்பணிக்கான ஆணையை வழங்கினார்.

கட்சி நிகழ்வில் இறந்தவர்களுக்கு அரசுப்பணி வழங்குவதா என பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கு தடை விதிக்க கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
ஜூலை 10 ஆம் திகதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "முதல்வர் விஜய் தற்போது கரூர் பயணத்தில் இருப்பதால் நிகழ்ச்சியை ரத்து செய்ய முடியாது. பாதிக்கப்பட்டோருக்கு அரசுப் பணி வழங்கலாம்.
ஆனால் அந்த பணி நியமன ஆணை தற்காலிகமானதாகவே இருக்க வேண்டும். அந்த பணியின் நிரந்தரதன்மை நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது" என இடைக்கால தீர்ப்பளித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்து.
ரத்து செய்த நீதிமன்றம்
இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ள நிலையில், "கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள விதிகளை தமிழ்நாடு அரசு மீறியுள்ளது சாலை விபத்தில் தினந்தோறும் உயிரிழப்பு நடக்கின்றன.

அவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க முடியுமா? என கேட்டு கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது என தீர்ப்பளித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |