புதுமணத் தம்பதியருக்கு வந்த பார்சல்... அடுத்து நிகழ்ந்த பயங்கரம்: நீதிமன்றத்தின் முடிவு

India Death Odisha Bomb Blast
By Balamanuvelan May 29, 2025 06:17 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in இந்தியா
Report

 இந்தியாவில் ஒரு புதுமணத்தம்பதிக்கு வந்த பார்சலை மணமகன் திறந்து பார்க்க முயல, அந்த பார்சலிலிருந்து வெடிகுண்டு வெடித்து அவர் பரிதாபமாக பலியானார்.

புதுமணத் தம்பதியருக்கு வந்த பார்சல்

இந்த சம்பவம் நிகழ்ந்தது, 2018ஆம் ஆண்டு, இந்தியாவிலுள்ள ஒடிஷா மாநிலத்தில். 

புதுமணத் தம்பதியருக்கு வந்த பார்சல்... அடுத்து நிகழ்ந்த பயங்கரம்: நீதிமன்றத்தின் முடிவு | Court Convict Newly Groom Dies In Parcel Bomb Case

சேகருக்கும் (Soumya Sekhar Sahu, 26) ரீமாவுக்கும் (Reema, 22) திருமணமாகி ஐந்து நாட்களே ஆகியிருந்தன.

அப்போது அவர்கள் வீட்டுக்கு ஒரு பார்சல் வந்துள்ளது. யாராவது திருமணப் பரிசு அனுப்பியிருக்கலாம் என எண்ணிய சேகர் அந்த பார்சலைப் பிரிக்க, அந்த பார்சலில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு ஒன்று பயங்கரமாக வெடித்துள்ளது. 

புதுமணத் தம்பதியருக்கு வந்த பார்சல்... அடுத்து நிகழ்ந்த பயங்கரம்: நீதிமன்றத்தின் முடிவு | Court Convict Newly Groom Dies In Parcel Bomb Case

குண்டு வெடித்ததில் சேகரும் அவரது உறவினரான ஜெமாமனி சாஹுவும் (85) கொல்லப்பட, ரீமா படுகாயமடைந்தார்.

திருப்புமுனை

புதுமணத் தம்பதியருக்கு யார் அந்த வெடிகுண்டை அனுப்பியது என புரியாமல் இந்த வழக்கு பெரும் குழப்பத்தை உருவாக்க, அவர்கள் வீட்டுக்கு ஒரு மொட்டைக் கடிதம் வந்துள்ளது.

அந்தக் கடிதத்தில், சேகர் வீட்டுக்கு வெடிகுண்டு அனுப்பப்பட்டதின் பின்னணியில் மூன்று பேர் இருப்பதாகவும், அந்த பார்சலில் எழுதப்பட்டிருந்த பெயரின் பின்னணியில் ஒரு ரகசிய செய்தி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

புதுமணத் தம்பதியருக்கு வந்த பார்சல்... அடுத்து நிகழ்ந்த பயங்கரம்: நீதிமன்றத்தின் முடிவு | Court Convict Newly Groom Dies In Parcel Bomb Case

அந்தக் கடிதத்தில் அந்த வெடிகுண்டு குறித்த விடயங்கள் விவரமாக எழுதப்பட்டிருந்ததைக் கண்ட பொலிசாருக்கு, அந்தக் கடிதத்தை எழுதியவரே குற்றவாளியாக இருக்கலாம் என்னும் சந்தேகம் ஏற்பட்டது.

இந்நிலையில், அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்த கையெழுத்தைக் கண்ட சேகரின் தாய், தனக்கு அந்தக் கையெழுத்து யாருடையது என தெரியும் என்று கூற, வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டது.

ஆம், அந்த பார்சலை அனுப்பியவர் சேகரின் தாயுடன் பணி செய்த புன்ஜிலால் மெஹர் என்னும் ஆசிரியர்.

சேகரின் தாய், புன்ஜிலாலுக்கு (Punjilal Meher, 49) பதிலாக பள்ளி ஒன்றின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

ஆக, சேகரின் தாய் மீதான வெறுப்பின் காரணமாகவே அவர் வீட்டுக்கு புன்ஜிலால் வெடிகுண்டு ஒன்றை அனுப்பியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த துயர சம்பவம் நிகழ்ந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, புன்ஜிலால் குற்றவாளி என நீதிமன்றம் தற்போது முடிவு செய்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


24ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, London, United Kingdom

28 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், La Courneuve, France

28 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Toronto, Canada

10 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, Neuilly-sur-Marne, France

31 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

29 May, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், கொழும்பு, London, United Kingdom

17 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், திருகோணமலை

28 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வண்ணார்பண்ணை, கனடா, Canada

30 May, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US