சர்வதேச பயண விதிகளில் மாற்றம்.! முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ள பிரித்தானிய அரசு
பிரித்தானியாவில் சர்வதேச பயணத்திற்கான விதிகளில் முக்கிய மாற்றங்கள் நாளை அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான அதிகாரப்பூரவ அறிவிப்பு வெள்ளிக்கிழமை அதிகாரிகளால் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன. முக்கிய அறிவிப்பாக பச்சை மற்றும் அம்பர் பட்டியல்கள் குறைந்த ஆபத்துள்ள நாடுகளின் (Low Risk Countries) ஒரு பிரிவில் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று சில தகவல்கள் கூறுகின்றன.
அர்ஜென்டினா, வங்காளதேசம், டொமினிகன் குடியரசு, இந்தோனேசியா, கென்யா, மாலத்தீவு, மெக்சிகோ, பாகிஸ்தான், பெரு, தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் துருக்கி ஆகிய 12 நாடுகள் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
தற்போது 62 நாடுகள் பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் உள்ளன. ஆனால் சிவப்பு பட்டியல் பயணத்தின் விதிகள் - தனி பயணிகளுக்காக 2,285 பவுண்டுகள் செலவில் தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் 11 இரவுகளை செலவிடும் விதிமுறை அப்படியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம், முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் இனி அவர்கள் புறப்படுவதற்கு முன் lateral flow பரிசோதனையும், அவர்கள் வந்த பிறகு பிசிஆர் சோதனையும் எடுக்க வேண்டியதில்லை என்ற பரிந்துரைகளும் உள்ளன.
இந்த நடவடிக்கை பயணிகளுக்கு 100 பவுண்டுகள் வரை மிச்சப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நேரத்தில், முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி போடாத பயணிகள் PCR சோதனையை எடுக்க வேண்டும் மற்றும் பச்சை பட்டியலில் உள்ள ஒரு நாட்டிலிருந்து வந்தால் அவர்கள் தனிமைப்படுத்த தேவையில்லை என கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த விதிமுறைகளில் மாற்றங்கள் ஏற்படலாம் மற்றும் புதிய அமைப்பின் கீழ் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் மற்றும் குறைந்த ஆபத்துள்ள இடத்திலிருந்து திரும்பி வரும்போது இரண்டு சோதனைகள் எடுக்க வேண்டி இருக்கலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஆனால், வெள்ளிக்கிழமை போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸிடமிருந்து (Grant Shapps) எதிர்பார்க்கப்படும் இந்த அறிவிப்பு இங்கிலாந்துக்கு மட்டுமே பொருந்தும் என கூறப்படுகிறது.
ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் அதிகாரப் பகிர்வு நிர்வாகங்கள் வெஸ்ட்மின்ஸ்டரில் அறிவிக்கப்பட்ட சமீபத்திய மாற்றங்களையும் செயல்படுத்தியுள்ளன.