பிரித்தானியாவில் இந்த பகுதிகளில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! 136 பேர் பலி: அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்
பிரித்தானியாவில் உள்ளூர் பகுதிகளில் 78 சதவீதம் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, பிரித்தானியாவில் 78 சதவீத உள்ளூர் பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது.
குறிப்பாக Greater Manchester-ல் உள்ள Trafford மிகவும் உயர்வை கொண்டுள்ளது. கடந்த 9-ஆம் திகதி முதல் ஏழு நாட்களில் 2006 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, 100,000 பேருக்கு 844 பேர் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இதற்கு அடுத்தபடியாக Northamptonshire-ல் உள்ள Wellingborough-வில் 639 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 573.2-ல் இருந்து 797.9 ஆக உள்ளது.
மூன்றாவதாக Cumbria-வில் உள்ள Barrow அதிக பாதிப்பை கொண்டுள்ளது. இங்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 520 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
வேல்ஸை பொறுத்தவரை அங்கிருக்கும் Torfaen அதிக விகிதத்தைக் கொண்டுள்ளது. இங்கு 718 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் பின் வடக்கு அயர்லாந்தில் பார்த்தால் Fermanagh மற்றும் Omagh-வில் 534.4 பேரும், Scotland-ல் உள்ள Stirling 493.2 பேரும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கடந்த ஜுலை மாதத்திற்கு பின் பிரித்தானியா தற்போது அதிக கொரோனா பாதிப்பை சந்தித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 42,776 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 28 நாட்களில் கொரோனா நேர்மறை சோதனை கொண்டவர்களில் 136 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் பிரித்தானியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை138,080-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த வாரத்தில் கொரோனாவால் மிகப் பெரும் உயர்வைக் கொண்ட ஐந்து பகுதிகள்
- Trafford (568.2 to 844.4)
- Ipswich (479.5 to 736.9)
- Winchester (340.7 to 576.5)
- Wellingborough (573.2 to 797.9)
-
Darlington (313.8 to 519.5)