பிரான்ஸ் கோவிட் சுகாதார பாஸ் பயன்பாடு நீட்டிப்பு: அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
பிரான்சில் கோவிட் சுகாதார பாஸ் பயன்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
நேற்று இந்த தகவலை வெளியிட்ட பிரான்ஸ் அரசு செய்தித்தொடர்பாளரான Gabriel Attal, நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரை கோவிட் சுகாதார பாஸ் பயன்பாடு நீட்டிக்கப்பட்டுள்ள செய்தியை உறுதி செய்தார்.
கொரோனா ஆலோசனை அமைப்பின் ஆலோசனையைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு குளிர்காலம் பிடிக்கும் என்பது நமக்குத் தெரியும் என்று கூறியுள்ள Gabriel, குளிர்ந்த சீதோஷ்ணம் நெருங்கி வருகிறது. ஆகவே, நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றார்.
இருந்தாலும், கொரோனா ஆலோசனை அமைப்பு, கோவிட் பாஸ் தொடர்பான விதிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் குறைக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளது.
அதன்படி, உணவகங்களில் வெளியே அமர்ந்து உண்ணும்போது பாஸ் தேவையில்லை, ஆனால், உணவகத்துக்குள் அமர்ந்து உணவு உண்ணுவதற்கு கோவிட் பாஸ் தேவை என்பது போன்ற விதி மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        