பிரித்தானியாவில் இங்கிருக்கும் 99 சதவீதம் பகுதிகளில் கொரோனா பரவிவிட்டது! ஊரடங்கு தளர்த்திய நிலையில் அதிர்ச்சி தகவல்
பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் இங்கிலாந்தில் கொரோனாவிற்கு கட்டுப்பாடுகளை தளர்த்திய நிலையில், அங்கு கொரோனா பரவல் தற்போது தீவிரமாகி வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக, இங்கிலாந்தில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தளர்வுகளை, பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் தளர்த்தினார்.
இதனால் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை, சமூக இடைவெளி தேவையில்லை, திருமணம், விழாக்கல் போன்றவற்றிற்கு அனைவருக்கும் அனுமதி என அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டது.
இந்நிலையில், இங்கிலாந்தில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் இருப்பதால், அங்கு நாள்தோறும் கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கொரோனாவால் இங்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 96-ஆக உயர்ந்துள்ளது.
இதுவே கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாத்திற்கு பின், இங்கு கொரோனாவால் புதிதாக 46,558 பேர் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது மோசமான அறிகுறி என்று கூறப்படுகிறது. மேலும்,
இங்கிலாந்தில் உள்ள 315 உள்ளூர் பகுதிகளில் 311 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து சமீப வாரங்களில், Redcar & Cleveland, Copeland, Stockton-on-Tees, Middlesbrough மற்றும் Castle Point என இந்த ஐந்து பகுதிகளில் கொரோனா பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ளது.
கடந்த ஜுலை 16-ஆம் திகதி முதல் ஏழு நாட்கள் வரை கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு, ஒரு ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
அதில், Norfolk-ல் இருக்கும் Breckland கொரோனாவிற்கான பரவலை தவிர்ப்பதற்கு மிகச் சிறந்த இடமாக குறிப்பிட்டுள்ளது.
Redcar & Cleveland
கடந்த ஜூலை 16-ஆம் திகதி முதல் ஏழு நாட்களில் இங்கு 2,096 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது 100,000 பேருக்கு 1,528 பேர் பாதிக்கப்படுவதற்கு சமம், அதுவே இதற்கு முந்தைய வாரத்தில் 761 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது அதன் பாதிப்பு தீவிரமாகியுள்ளது.
Middlesbrough
அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதியில், இது இரண்டாவது இடத்தில் உள்ளது, இங்கு கொரோனா பாதிப்பு 842-ஆக இருந்த நிலையில், தற்போது புதித்தாக ஒவ்வொரு நாளும் 1905-க்கும் மேற்பட்டோர் பாதிக்கபட்டு வருகின்றனர்,
ஏற்கனவே கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்தால், இங்கிலாந்து கடுமையான விளைவை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கப்படும் நிலையில், தளர்வு அறிவிக்கப்பட்டுவிட்டது.
இருப்பினும் கடந்த வாரத்தில் மட்டும் புதிதாக கொரோனாவால் 40 சதவீதத்திற்கும் அதிகமான இறப்பு பதிவாகியுள்ளது.
தற்போது கிடைத்திருக்கும் புள்ளி விவரங்களை வைத்து பார்த்து, இங்கிலாந்தில், இருக்கும் 99 சதவீதம் பகுதிகளில் கொரோனா பரவிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், மீண்டும் கொரோனா பரவல் இருப்பதால், மக்கள் மிகுந்த கவனமுடன் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
மேலும், தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் வெளியிட்டுள்ள தனி புள்ளிவிவரங்கள் படி, இங்கிலாந்தில் 154,000 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.