கொரோனா வைரஸ் இங்கிருந்து தான் கசிந்தது! அமெரிக்க குடியரசுக் கட்சி வெளியிட்ட பரபரப்பு தகவல்
கொரோனா வைரஸ் தோற்றும் குறித்து அமெரிக்க குடியரசு கட்சி பரபரப்பை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வெளியுறவுத்துறை குழுவில் குடியரசுக் கட்சியினர் வெளியிட்ட அறிக்கையில், வுஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா கசிந்தது என்பதை ஆதாரங்கள் நிரூபிக்கின்றன.
ஆதாரங்களின் படி, செப்டம்பர் 12, 2019-க்கு முன்பு சீன ஆராய்ச்சி மையத்திலிருந்து வைரஸ் கசிந்திருக்கலாம் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
வுஹான் ஆராய்ச்சி மையம், அமெரிக்க நிபுணர்களின் உதவியுடன் மனிதர்களைப் பாதிக்கும் வகையில் கொரோனா வைரஸை மாற்றியமைத்ததற்கான போதுமான ஆதராங்கள் இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையைப் பகிர்ந்த குழுவில் உள்ள உயர்மட்ட குடியரசுக் கட்சியின் காங்கிரஸ்காரரான மைக்கேல் மெக்கால், சீனா அனைத்தையும் மூடி மறைத்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.
கொரோனா தோற்றம் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், சந்தையிலிருந்து கொரோனா தோன்றியது என்ற வாதத்தை நிராகரிக்க வேண்டிய நேரம் இது என்று நான் நம்புகிறேன்.
அதற்கு பதிலாக, இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, அனைத்து ஆதாரங்களும் வுஹான் ஆராய்ச்சி மையத்திலிரு்நது கசிந்தது என்பதை நிரூபிக்கின்றன என மைக்கேல் மெக்கால் கூறியுள்ளார்.
இருப்பினும், வைரஸின் தோற்றம் குறித்து அமெரிக்க உளவுத்துறை இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வுஹான் ஆய்வகத்திலிருந்து மரபணு மாற்றப்பட்ட கொரோனா கசிந்ததாக கூறப்படுவதை சீனா முற்றிலுமாக மறுத்து வருகிறது.