கோவிட் எப்போது முடிவுக்கு வரும்? உலகின் முன்னணி பொது சுகாதார நிபுணரின் கருத்து
வேகமாக பரவி வரும் Omicron வகை கொரோனா வைரஸ் மற்றும் பெருமளவில் அளிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் இரண்டையும் இனைத்துப் பார்க்கும்போது, இந்த ஆண்டுக்குள்ளேயே கோவிட் முடிவுக்கு வந்துவிடக்கூடும் என்கிறார் உலகின் முன்னணி பொது சுகாதார நிபுணர்களில் ஒருவர்.
Wellcome Trust என்ற அமைப்பின் இயக்குநரும், பிரித்தானிய அரசின் அறிவியல் ஆலோசனைக்குழுவின் முன்னாள் ஆலோசகருமான Sir Jeremy Farrar, பிரித்தானியாவும் வேறு சில நாடுகளும் பெருமளவில் கொரோனா தடுப்பூசி வழங்கியுள்ளதாலும், கொரோனா பரவல் காரணமாக இயற்கை நோயெதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதாலும் வலுவான நிலையிலிருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆகவே, அரசு கொரோனா கட்டுப்பாடுகளை நீக்க முயற்சிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதுதான் என்று கூறியுள்ள அவர், ஆனாலும், இன்னமும் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிந்துகொண்டுதன இருக்கின்றன, குளிர்காலம் வேறு, ஆக, நாம் இன்னமும் கொரோனா காலகட்டத்தின் நடுவில்தான் இருக்கிறோம்.
ஆகவே முழுமையாக அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கிவிடுவதில் தனக்கு உடன்பாடு இல்லை என்கிறார். அதேபோல், மற்ற நாடுகள் பலவற்றில் போதுமான அளவில் தடுப்பூசிகள் வழங்கப்படாத நிலையில், அந்த நாடுகள் இன்னமும் அபாய நிலையிலேயேதான் உள்ளன என்கிறார் அவர்.