பிரித்தானியாவில் வரவிருக்கும் புதிய கொரோனா கட்டுப்பாடு விதி? இனி இது கட்டாயமாக மாறலாம்: முக்கிய தகவல்
பிரித்தானியாவில் கொரோனா வைரஸின் நான்காவது அலையை தவிப்பர்தற்கு எதிர்கால திட்டம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால் அதிகம் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரித்தானியாவில், இப்போது பெரும்பாலான மக்கள் கொரோனாவிற்கான தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர்.
இதனால் அங்கு இன்னும் சில நாட்களில் கொரோனாவிற்கான அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படவுள்ளது. இது உறுதி என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், கொரோனாவின் நான்காவது அலையில் இருந்து சிக்காமல் இருக்க, கொரோனாவிற்கான சான்றிதழ் இருந்தால், மட்டுமே பப்கள், உணவகங்கள் போன்றவைகளில் மக்கள் அனுமதிக்கப்படுவர் என்ற திட்டத்தை அரசு வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி செய்வதன் மூலம் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் நிச்சயமாக கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்வர் என்று கருதப்படுகிறது. வரும் செப்டம்பர் மாதத்திற்குள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி போட்டுவிட வேண்டும் என்ற இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பிரித்தானியாவில் இலையுதிர்காலத்தில், கொரோனாவின் நான்காவது அலை தாக்க வாய்ப்புள்ளதால், பப்கள், பார்கள், உணவகங்கள் மற்றும் கிளப்புகளில் கொரோனாவிற்கான தடுப்பூசி போட்டுக் கொண்ட சான்றிதழ்கள் கட்டாய தேவையாக மாறும்.
இந்த நடவடிக்கை இளைஞர்களிடையே தடுப்பூசி வீதத்தை அதிகரிப்பதுடன், மற்றொரு எழுச்சியைத் தடுக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். தற்போதைக்கு இது கட்டாயப்படுத்தப்படாது என்றாலும், இலையுதர் காலத்திலோ அல்லது குளிர்காலத்திலோ பிரித்தானியா இந்த கொரோனாவால் ஒரு கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டால் இதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் செப்டம்பர் மாத இறுதிக்குள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனாவிற்கான இரண்டு தடுப்பூசிகளும் போட்டுவிட வேண்டும் என்ற திட்டம் வைக்கப்பட்டுள்ளது.
அப்படி இது சாத்தியமானால், சமூக இடைவெளி பின்பற்ற முடியாத இடங்களில், இந்த தடுப்பூசி சான்றிதழ் முறை அமுல்படுத்தப்படும்.
இந்த தகவல் குறித்து பிரதமர் அலுவலகம் தரப்பில் கூறுகையில், இலையுதிர்காலத்தில், இந்த தடுப்பூசி சான்றிதழ் ஒரு முக்கியமான கருவியாக மாறும் என்று தெரிவித்துள்ளது.
இதுவரை பிரித்தானியாவில் 30 முதல் 34 வயதிற்குட்பட்டோரில் 76 சதவீதத்தினரும், 50 வயதிற்கு மேற்பட்டோரில் 95 சதவீதத்தினரும், தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.