இந்த பழக்கம் உள்ளவர்களுக்கு கொரோனா வந்தால் அவ்வளவு தான்! மரணம் நேரலாம்: ஆய்வில் எச்சரிக்கை!
உடல் உழைப்பில்லாமல் சோம்பலாக இருப்பவர்கள் மிக எளிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று பிரித்தானிய ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசினில் செவ்வாய்க்கிழமை வெளிவந்த புதிய ஆய்வறிக்கையில் இந்த எச்சரிக்கை தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கிட்டத்தட்ட 50,000 பேரை உள்ளடக்கிய ஒரு ஆய்வின்படி, உடற்பயிற்சியின் பற்றாக்குறை மிகவும் கடுமையான அறிகுறிகளுடனும், இறப்புக்கான அதிக ஆபத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
கொரோனா பரவுவதற்கு முன்பு குறைந்தபட்சம் இரண்டு வருடங்களாவது உடல் ரீதியாக செயலற்ற நிலையில் இருப்பவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும், தீவிர சிகிச்சை தேவைப்படுவதற்கும், இறப்பதற்கும் அதிக வாய்ப்புள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
உண்மையில், புகைபிடித்தல், உடல் பருமன் அல்லது உயர் இரத்த அழுத்தம் போன்ற பிற ஆபத்தான காரணிகளுடன் ஒப்பிடும்போது, "உடல் உழைப்பற்ற தன்மை எல்லா விளைவுகளிலும் வலுவான ஆபத்து காரணியாக இருந்தது" என்று ஆய்வாளர்கள் முடிவு செய்தனர்.
Sedentary Lifestyle உடையவர்கள், அதாவது வாழ்க்கையில் எந்நேரமும் ஒரே இடத்தில் உட்கார்த்தபடி அல்லது படுத்தபடி, நொறுக்குத் தீனிகளை எடுத்துக்கொடு, தொலைகாட்சி பார்த்துக்கொண்டு, முழு நேரமும் மொபைல் போனில் கேம் விளையாடுவது, சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிடுவது என எந்த உடல் உழைப்பும் இல்லாத வாழ்க்கைமுறை கொண்ட நபர்களுக்கு மிகுந்த ஆபத்து இருப்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
அவ்வப்போது உடல் உழைப்பில் ஈடுபடுபவர்களில் கூட 32 சதவீதம் பேர் இறந்துள்ளனர், 20 சதவீதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 10 சதவீதம் பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகினறனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.