மீண்டும் அக்டோபரில் கொரோனா தாக்கலாம்: எச்சரிக்கும் ஜேர்மன் அறிவியலாளர்
ஜேர்மனியில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகிறது. ஆனால், குளிர்காலத்தில் டெல்டா வகை கொரோனா மீண்டும் ஜேர்மனியைத் தாக்கலாம் என அறிவியலாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
இப்போது ஜேர்மனியில் கொரோனா நிலைமை அமைதியாக காணப்பட்டாலும், போதுமான எண்ணிக்கையிலான மக்கள் கொரோனா தடுப்பூசி பெறாததால் இந்த நிலை நீடிக்காது என தான் எண்ணுவதாக தெரிவிக்கிறார் ஜேர்மன் வைராலஜி துறை நிபுணரான Christian Drosten.
குறைந்த அளவிலான மக்கள் கொரோனா தடுப்பூசி பெற்றுள்ள கிழக்கு ஜேர்மன் மாகாணங்களில் கொரோனா பரவல் வேகமெடுக்கத் தொடங்கிவிட்டதாகவும், அதே நிலைமை மற்ற பகுதிகளுக்கும் ஏற்படலாம் என்றும் அவர் தெரிவிக்கிறார்.
அக்டோபரில் குளிர்கால கொரோனா அலை ஒன்று உருவாகலாம் என தான் எண்ணுவதாக அவர் தெரிவிக்கிறார்.
கடந்த ஆண்டிலும், ஜேர்மனியில் இதே போல் கொரோனா அதிகரித்ததாக கூறும் Drosten, அதனால், அக்டோபர் மாதத்தின் இரண்டாவது பாதியில் மீண்டும் கொரோனா பயங்கரமாக அதிகரிக்கும் என்கிறார்.
இன்று மட்டும், ஜேர்மனியில் புதிதாக 11,780 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள், 67 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.