கொரோனாவிலிருந்து விடுபட்டவர்களை தாக்கும் முக்கிய பிரச்சினை: எச்சரிக்கும் ஆய்வு
கொரோனா தொற்றுக்கு ஆளானோர் கொரோனாவிலிருந்து விடுபட்டாலும், கொரோனா குணமடைந்த ஓராண்டுக்குள் அவர்களுக்கு மாரடைப்பு தாக்கும் அபாயம் 60 சதவிகிதம் அதிகம் உள்ளதாக ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.
கொரோனா பாதித்த சுமார் 150,000 பேருக்கும் அதிகமானோரின் மருத்துவமனை ஆவணங்களை ஆய்வு செய்த அமெரிக்க ஆய்வாளர்கள், ஒருவருக்கு கொரோனா தொற்றியதற்குப் பின் வரும் 12 மாதங்களில் அவர்களுக்கு மாரடைப்பு, இதய நோய் மற்றும் பக்க வாதம் வருவதற்கான அபாயம் அதிகம் இருப்பதாக கண்டறிந்துள்ளார்கள்.
கொரோனா தாக்காதவர்களை ஒப்பிடும்போது, கொரோனா தாக்கியவர்களுக்கு இதய பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு 55 சதவிகிதம் அதிகம் உள்ளதாக அவர்களது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா தொற்று ஏற்படும்போது, கொரோனா வைரஸ் உடலிலுள்ள செல்களை தாக்குகிறது. அதனால் இதய செல்களும், நோய் எதிர்ப்பு அமைப்பும் கூட பாதிக்கப்படலாம். ஆக மொத்தத்தில் இதய பிரச்சினைகளுக்கு இது வழிவகுக்கிறது.
மிதமான அளவில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் மற்றும் முன்பு ஆரோக்கியமாக இருந்தவர்கள் கூட கொரோனாவுக்குப் பின் இதயப் பிரச்சினையால் பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
ஆய்வை மேற்கொண்ட வாஷிங்டன் பல்கலை ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் Dr Ziyad Al-Aly கூறும்போது, கொரோனாவைத் தொடர்ந்து, நாடுகள் இதய பிரச்சினைகளால் ஏற்படும் பழுவைத் தாங்க தயாராக இருக்கவேண்டும் என உலக நாடுகளை எச்சரித்துள்ளார்.