கொரோனாவில் இருந்து தப்பிக்க மூன்றாவது தடுப்பூசியும் போடனுமாம்! வெளியான முக்கிய தகவல்
கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள, எதிர்ப்பு தன்மையை நீட்டித்து கொள்வதற்கு மூன்றாம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவின் மூத்த தொற்று நோய் வல்லுநர் ஆண்டனி பவுசி தெரிவித்துள்ளார்.
உலகையே மிரட்டி வரும் கொரோனாவிற்கு தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இருப்பினும் அந்த தடுப்பூசிகள் நிரந்தமாக கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாக்குமா? இல்லையா? என்பது தெரியவில்லை. இருப்பினும் முதலில் மக்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஏற்கெனவே தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மூன்றாம் டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவின் மூத்த தொற்று நோய் வல்லுநரும், வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகருமான ஆண்டனி பவுசி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனா தடுப்பூசி தரும் பாதுகாப்பு நிரந்தரமாக நீடிக்கும் என எதிர்பார்க்க முடியாது.
இதன் காரணமாக, சில சமயங்களில் மூன்றாம் டோஸ் அல்லது கூடுதலாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட வேண்டும். எவ்வளவு இடைவெளிக்கு பின் தடுப்பூசி போட வேண்டும் என்பதை தற்போது ஆய்வு செய்து வருகிறோம்.
சோதனைகளில் பங்கேற்கும் நபர்களை கூர்ந்து கண்காணித்து வருவதுடன், வைரஸுக்கு எதிரான தன்மை எவ்வளவு காலத்துக்கு நீடிக்கிறது என்பதை அறிய முயற்சித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போதைய சூழலில் தடுப்பூசியின் எதிர்ப்பு தன்மை 6 மாதம் முதல் 1 ஆண்டு வரை இருப்பதாக தெரிவித்துள்ளார்.