பிரித்தானியாவில் புதிய கட்டுப்பாடுகள்! வரும் 7-ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்ற அறிவிப்பு
உலகில் ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி வரும் நிலையில், பிரித்தானியா தன்னுடைய பயணவிதிகளை கடுமையாக்கியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை ஒமைக்ரான கொரோனா வைரஸ், தற்போது உலகின் பல்வேறு நாடுகள் மெல்ல, மெல்ல பரவி வருகிறது. இதனால் பல நாடுகள் பயணக்கட்டுபாடுகளை விதித்து வருகிறது.
அந்த வகையில், பிரித்தானியா வரும் 7-ஆம் திகதி முதல்(டிசம்பர் 7-ஆம் திகதி) அதிகாலை 4 மணி முதல் புதிய பயணக்கட்டுப்பாடு விதிகளை அமுல்படுத்தியுள்ளது. பிரித்தானியாவிற்குள் நுழையும் பயணிகள், அவர்கள் புறப்படும் நேரத்திற்கு 48 மணி நேரத்திற்கு முனு கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும்.
COVID UPDATE
— Sajid Javid (@sajidjavid) December 4, 2021
In light of the most recent data we are taking further action to slow the incursion of the Omicron variant.
From 4am Monday, only UK/Irish citizens & residents travelling from Nigeria will be allowed entry and must isolate in a managed quarantine facility. 1/3
அதன் பின் இங்கு வந்து இறங்கிய பின்பு, அந்த பரிசோதனை முடிவுகளை சமர்பிக்க வேண்டும். பயணத்துடன் தொடர்புடையவர்கள் மூலம் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் Sajid Javid கூறியுள்ளார்.
மேலும், தற்போது பிரித்தானிய அறிவித்துள்ள சிவப்பு பட்டியல் கொண்ட நாடுகளின் பட்டியலில், நைஜீரியாவும் சேர்க்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான பயணக்கட்டுப்பாடுகள் சிவப்பு பட்டியல் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் இங்கு இறங்கிய பின்பு ஹோட்டலில் 10 நாட்கல் தனிமைப்படுத்தப்பட்டு, அதற்கான தொகை 2000 பவுண்ட் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நைஜீரியாவும் UK பயண சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது, அதாவது பெரும்பாலான பயணங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன மற்றும் திரும்பும் UK குடிமக்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டலில் 10 நாட்களுக்கு £ 2,000 செலவில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
பிரித்தானியாவை பொறுத்தவரை தற்போது ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 27-ஐ தொட்டுள்ளது. ஏற்கனவே பயண திட்டங்களில் இருப்பவர்களுக்கு, இது ஒரு கடுமையான நடவடிக்கை தான், இது ஒரு தற்காலி முடிவு என்று Sajid Javid தெரிவித்துள்ளார்.