இது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால்... பிரித்தானியாவில் நிலையே வேறு மாதிரி இருந்திருக்கும்: எச்சரிக்கும் பிரபல நிபுணர்
கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் மட்டும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால், பிரித்தானியாவில் அரைமில்லியன் இறப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று முன்னணி நிபுணர் கூறியுள்ளார்.
சீனாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதிலும் பரவி கோடிக்கணக்கான மக்களின் உயிரை வாங்கியுள்ளது.
தற்போது அந்த கொரோனா வைரஸில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள, தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம், கொரோனா உயிரிழப்புகள் பெருமளவில் குறைந்துள்ளது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசிகளான Oxford மற்றும் AstraZeneca-ஐ உருவாக்க உதவிய பேராசிரியர் Sir Andrew Pollard, கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால், பிரித்தானியாவில் அரைமில்லியன் இறப்புகள் ஏற்பட்டிருக்கலாம்.
அதே போன்று இதே தடுப்பூசிகள் காரணமாக இதுவரை சுமார் 150,000 உயிர்கள் காப்பாற்றபட்டிருக்கலாம் என்று கூறியுள்லார்.
இன்று பிரபல ஊடகமான பிசிசியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், எங்களிடம், ஆக்ஸ்போர்டு தடுப்பூசி மூலம், இரண்டு பில்லியன் டோஸ்கள் (உலகளவில்) கிடைத்துள்ளன.
அதுவே நீங்கள் மொத்தமாக பார்த்தால் நாம் 7.6 பில்லியன் டோஸ்களில் இருக்கிறோம். உலகளவில் அந்த 7.6 பில்லியன் டோஸ்கள் இல்லாவிட்டால், நாம் வேறு ஒரு சூழ்நிலையில் இருந்திருப்போம்.
கடந்த ஆண்டு கொரோனா சூழ்நிலையில், 300,000 முதல் 500,000 இறப்புகள் பதிவாகலாம் என்று கணிக்கப்பட்டன. ஆனால், உண்மையில் தடுப்பூசி இல்லாமல் இதுவரை சுமார் 300,000 பேர் இறந்திருக்கலாம்.
தடுப்பூசி கிடைக்காவிட்டால் இன்னும் எத்தனை பேர் இறந்திருக்கலாம் என்பதை சரியாக மதிப்பிடுவது மிகவும் கடினம், எனவே தடுப்பூசி இல்லையென்றால், உலகம் முழுவதிலும் இறப்பு எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார்.