அமெரிக்க அதிகாரிகளை அதிர வைத்த இந்தியர் கொண்டு வந்த பார்சல்! உள்ளே என்ன இருந்தது தெரியுமா?
அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் கொண்டு வந்த பார்சலை திறந்து பார்த்த அதிகாரிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. இதனால் இந்தியாவில் இதுவரை ஆறு லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
அதே சமயம் பலி எண்ணிக்கையும் நினைத்து பார்க்காத வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த கொரோனா பயத்தால், இந்தியர்கள் சிலர் அதில் இருந்து தப்பிக்க, மாட்டுச்சாணத்தை உடலில் பூசிக்கொள்வது, மாட்டின் சிறுநீரைப் பருகுவது என உள்ளனர்.
மேலும் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுரேந்திர சிங் உள்ளிட்டோர் மாட்டின் சிறு நீரைப் பருகினால் கொரோனா பாதிப்பு ஏற்படாது எனக் கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்கட் விமானநிலையத்தில், இந்தியர் ஒருவரை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் கொண்டு வந்திருந்த பார்சல் அவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால், அதை திறந்து பார்த்த போது, அவரிடம் பை நிறைய வறட்டி எனப்படும் மாட்டுச்சாணம் இருப்பது கண்டறியப்பட்டது.
இதைப் பார்த்த விமான நிலைய அதிகாரிகள் அதிர்ந்துபோயுள்ளனர். ஏனெனில், அமெரிக்காவில் மாட்டுச்சாணம் தடைசெய்யப்பட்டுள்ளது. அவை கால்நடைகளுக்குக் கால் மற்றும் வாய் தொற்று நோயை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
மேலும், அங்குக் கால்நடை உரிமையாளர்களை இந்த நோய் பெரிதும் அச்சுறுத்தி வருவதால், இந்த தடை நீடிக்கப்படுகிறது.
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக மாட்டுச்சாணத்தை உடலில் பூசிக்கொள்வது போன்ற பிற்போக்குத்தனமான காரியங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் அமெரிக்காவில் இந்தியரிடம் இருந்து மாட்டுச்சாணம் கைப்பற்றப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.