1000-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு இறுதிச் சடங்கு செய்த நபரின் நிலை என்ன தெரியுமா? பரிதாப பின்னணி
கொரோனாவின் போர் வீரன் என்று இந்தியாவில் அழைக்கப்பட்ட நபர், இறுதியில் அந்த கொரோனாவாலே உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக நாட்டில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
ஆனால், உண்மையில் கொரோனாவால் இந்தியாவில் 1.6 மில்லியனுக்கு அதிகமான மக்கள் இறந்திருக்க கூடும் என்று மதிப்பிடப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவின் போர் வீரன் என்றழைக்கப்பட்ட 67 வயது மதிக்கத்தக்க Chandan Nimje இறுதியில் கொரோனாவாலே உயிரிழந்துள்ளார்.
இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கொரோனாவால் இறந்தவகளின் உடலை அடக்கம் செய்வதற்கு உறவினர்கள் பயப்படுவர்.
ஏனெனில், அவரது தொற்று நோய் நமக்கு பரவிடுவோ என்ற அச்சத்தில் இருப்பர். அப்படி அச்சத்தில் இருக்கும் உறவினர்களுக்கு உதவும் வகையில், Chandan Nimje என்ற 67 வயது மதிக்கத்தக்க ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, கடந்த ஆண்டு, மார்ச் மாதம் அமைக்கப்பட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்Rataudi's King Cobra Youth Force (KCYF) இளைஞர் படையில் சேர்ந்தார்.
அதன் படி மஹாராஷ்டிராவின் நாக்பூரில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை எடுத்து தகனம் செய்து வந்தார். அப்படி இவர் சுமார் 1300-க்கும் மேற்பட்ட உடல்களை தகனம் செய்தார்.
இதனால் இவரை கொரோனாவின் போர் வீரன் என்று அழைக்கப்பட்டார். இணையவாசிகள் பலரும் இவரின் செயலைப் பாராட்டினர். இந்நிலையில், இவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
அவர் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சேமித்து வைத்திருந்த பணம் முழுவதும், அவரை காப்பாற்ற செலவழித்த போதும், கடந்த மே மாதம் 26-ஆம் திகதி அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த Chandan Nimje-க்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்றும், ஒரு சரியான படுக்கை கூட கிடைக்கவில்லை.மருத்துவர்களின் அலட்சியமே அவரது மரணத்திற்கு காரணம் என்று அவருடன் இருந்த தன்னார்வலர்களில் ஒருவரான தாதா என்பவர் கூறியுள்ளார்.
இது குறித்து வழக்கு தொடர்ப்போவதாகவும் உறுதியளித்துள்ளார். இப்படி பலருக்கு நல்லது செய்தும், இவருக்கும் இப்படி ஒரு நிலையா ஏற்பட வேண்டும் என்று இணையவாசிகள் வேதனையான பதிவை பதிவிட்டு வருகின்றனர்.