சர்வதேச கிரிக்கெட்டில் இனி ‘பேட்ஸ்மேன்’ இல்லை! விதிகளில் அதிரடி மாற்றம்... வெளியான முக்கிய தகவல்
கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன் என்பதற்குப் பதிலாக பேட்டர் என்ற வார்த்தையை இனி பயன்படுத்துவோம் என கிரிக்கெட் விதிமுறைகளுக்கான ஒரே அத்தாரிட்டியான எம்.சி.சி. கிளப் தெரிவித்துள்ளது.
பெண்களும் கிரிக்கெட்டில் ஆண்களுக்குச் சமமாக பல தொடர்களில் ஆடுவதால் பாலின சமத்துவத்தை பேணுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஜெண்டில்மேன்களின் கேம் கிரிக்கெட் என்று கூறப்படுவது இப்போது ஜெண்டில்வுமன் கேம் ஆகவும் மாறியுள்ளதால் எனவே பாலின வேறுபாட்டை அதை வர்ணிக்கும் சொற்பொருள் அளவிலேயே மாற்றத்தை கொண்டு வர வேண்டியுள்ளது. ஆகவே பொதுவான பேட்டர், பவுலர் போன்ற சொற்களை பயன்படுத்துவதுதான் அரசியல் ரீதியாக சரியானது என்கிறது எம்.சி.சி.
இது தொடர்பாக எம்சிசி வெளியிட்ட அறிக்கையில், பாலின சமநிலை சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம் கிரிக்கெட்டில் அனைவரையும் உள்ளடக்கிய நிலை எட்டப்பெறும். இதனையடுத்து பேட்ஸ்மேன் என்பதற்குப் பதிலாக பேட்டர் என்ற வார்த்தையை இனி பயன்படுத்துவோம்.
பவுலர்கள், பீல்டர்கள் பொதுவான சொற்களாக உள்ளன, ஆனால் பேட்ஸ்மேன் என்பதில் மேன் என்பது ஆண்களைக் குறிப்பதாக உள்ளது எனவே இந்த மாற்றம் உடனே அமலுக்கு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
மகளிர் கிரிக்கெட்டும் பெரிய அளவில் முன்னேறி வருகிறது, ரசிகர்கள் கவனம் அந்த கிரிக்கெட்டின் மீதும் அதிகம் இருக்கிறது என்பதற்கு உதாரணம் தான் மெல்போர்னில் நடந்த டி20 உலகக்கோப்பை இறுதியை சுமார் 86,174 பேர் பார்த்துள்ளனர்.
இந்நிலையில் பேட்டர் மாற்றத்தை ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் வரவேற்றுள்ளனர்.