பெற்றோரை வெறுத்த இளம்பெண்: காதலிக்காக காதலன் செய்த கொடூரச் செயல்
தனக்காக தன் காதலன் எதையும் செய்வான் என்பதைப் புரிந்துகொண்ட ஒரு இளம்பெண், தன் பெற்றோரைக் கொல்ல தன் காதலனைப் பயன்படுத்திக்கொண்ட சம்பவம் ஒன்று ஜேர்மனியில் நடைபெற்றுள்ளது.
பெற்றோர் மீது வெறுப்பு
ஜேர்மனியின் பவேரியாவிலுள்ள Mistelbach என்ற இடத்தில் வாழ்ந்துவந்த ஒரு இளம்பெண் தன் பெற்றோரை வெறுத்த காரணத்தால், அவர்களைக் கொலை செய்யவே துணிந்துள்ளார்.
தனக்காக தன் காதலன் எதையும் செய்யத் தயாராக இருப்பதைப் புரிந்துகொண்ட அந்த 17 வயது பெண், அவனை வைத்தே தன் திட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.
கொலை செய்யப்பட்ட மருத்துவ தம்பதி
முறையே 51 மற்றும் 47 வயதுள்ள மருத்துவர்களான தம்பதியர் தங்கள் வீட்டின் படுக்கையறையில் குத்திக்கொல்லப்பட்ட நிலையில், பொலிசார் குற்றவாளியைத் தீவிரமாகத் தேடிவந்தார்கள்.
அப்போது, ஒரு 19 வயது இளைஞர் தாமாகவே வந்து, தான்தான் அந்த தம்பதியரைக் கொலை செய்ததாக பொலிசாரிடம் சரணடைந்தார்.
அந்த இளைஞருக்கு பதின்மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது காதலியும், கொலை செய்யப்பட்ட தம்பதியரின் மகளுமான அந்த இளம்பெண்ணுக்கு ஒன்பதரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த கொலைகளில் தனக்கு தொடர்பில்லை என அந்த இளம்பெண் கூறியுள்ளார்.
நீதிபதி Andrea Deyerling தீர்ப்பு விவரத்தை தெரிவிக்கும்போது, இந்தக் கொலை தம்பதியரின் மற்ற மூன்று பிள்ளைகளை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதைக் குறிப்பிட, பிள்ளைகள் கண்ணீர் விட்டுக் கதற, இந்த நீதிமன்றம் இவ்வளவு கண்ணீரை இதுவரைக் கண்டதில்லை என்றார் அவர்.